ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பெண்கள் அனைவரும் தங்கள் கணவனின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்களா? அப்படி என்றால் விவாகரத்தானவர்கள் அல்லது திருமணம

விலா எலும்பு ஹவ்வா (அலை) பெண்கள் படைப்பு கட்டுக்கதை

← முந்தையஅடுதது →
கேள்வி
பெண்கள் அனைவரும் தங்கள் கணவனின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்களா? அப்படி என்றால் விவாகரத்தானவர்கள் அல்லது திருமணம் ஆகாமல் இறந்த பெண்களின் நிலை என்ன?
பதில்
பதில்:

எல்லாப் பெண்களும் தங்களுடைய கணவனின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்று இஸ்லாம் எங்கும் கூறவில்லை. இது சமூகத்தில் உள்ள முற்றிலும் தவறான புரிதலாகும்.

அவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் கணவனின் விலா எலும்பிலிருந்து படைக்கப்படுகிறார்கள் என்று கொண்டால், நான்கு திருமணம் முடித்தவர் அல்லது சுலைமான் (அலை) போன்று பல திருமணங்கள் செய்த ஒருவருக்கு அத்தனை விலா எலும்புகள் இருந்ததா என்ற கேள்வியும், விவாகரத்து பெற்று வேறொருவரை மணக்கும் பெண் யாருடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார் என்ற கேள்வியும் எழும். இது நடைமுறைச் சாத்தியமற்றது.

உண்மை என்னவென்றால், அன்னை ஹவ்வா (அலை) அவர்கள் மட்டுமே முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்கள் என்பதைத் தவிர, ஒவ்வொரு பெண்ணும் அவரவர் கணவனின் விலா எலும்பிலிருந்து படைக்கப்படுகிறார்கள் என்பதற்கு மார்க்கத்தில் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.

← முந்தையஅடுதது →