ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மது பகிரப்படும் மற்றும் இஸ்லாத்திற்கு முரணான களியாட்டங்கள் நடக்கும் ஹோட்டல்களில் தங்குவதோ அல்லது திருமண வைபவங்களை நடத்து

ஹோட்டல் மது திருமணம் தீமையை தடுத்தல்

← முந்தையஅடுதது →
கேள்வி
மது பகிரப்படும் மற்றும் இஸ்லாத்திற்கு முரணான களியாட்டங்கள் நடக்கும் ஹோட்டல்களில் தங்குவதோ அல்லது திருமண வைபவங்களை நடத்துவதோ மார்க்க ரீதியாகக் கூடுமா?
பதில்
பதில்:

மதுபானங்கள், ஆபாசமான களியாட்டங்கள் மற்றும் இஸ்லாத்திற்கு முரணான ஒழுக்கக்கேடான விஷயங்கள் நடக்கும் இடங்களை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு தீமையைக் கண்டால் கையால், வாயால் அல்லது குறைந்தபட்சம் மனதாலாவது வெறுக்க வேண்டும் என்பது இஸ்லாமிய அடிப்படை. மனதால் வெறுப்பது என்பது அந்தத் தீமை நடைபெறும் இடங்களுக்குச் செல்லாமல் அதனைப் புறக்கணிப்பதேயாகும். நமது திருமணங்களை ஆடம்பரத்துக்காக இது போன்ற ஹோட்டல்களைத் தேடிச் சென்று நடத்துவது மிகப்பெரிய குற்றமாகும். நாம் தீமையை அங்கீகரிப்பதாக அது அமைந்துவிடும்.

எனினும், இதில் தவிர்க்க முடியாத நிர்ப்பந்த சூழ்நிலைகள் ஒன்று உள்ளது. உதாரணமாக, ஒரு வெளி ஊருக்குப் பிரயாணம் செய்யும் போது வேறு எந்த தங்குமிடமும் இல்லாத கட்டாய நிலை ஏற்பட்டால், அல்லது டிக்கெட்டுகளிலேயே கட்டாய இன்சூரன்ஸ் இணைக்கப்பட்டிருந்தால், அது நாம் விரும்பித் தேடிப் போகும் தீமை அல்ல. வேறு வழியற்ற நிலையில், அங்குள்ள தீமைகளில் கலக்காமல் தற்காலிகமாக நமது தேவையை முடித்துச் செல்வதில் குற்றமில்லை.

ஆனால், நிறைய வாய்ப்புகள் (சாய்ஸ்கள்) இருக்கும் போது, வான்டடாக தீமை நடக்கும் ஹோட்டல்களைத் தெரிவு செய்து திருமணங்களை நடத்துவது நாம் அந்தத் தீமைக்குத் துணைபோவதாகும். எந்த சூழ்நிலையிலும் தேடிச் சென்று தீமையில் பங்கெடுப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

← முந்தையஅடுதது →