கேள்வி
தனித்துத் தொழுகின்ற பொழுது அதான், இகாமத் சொல்வது கட்டாயமா? தொழுகையின் பொழுது தக்பீர் கட்டிய பின்னால் முன்பின் அசைவதற்கு அனுமதி உண்டா?
பதில்
பதில்:
தனித்துத் தொழுபவர் அதான், இகாமத்தை தமக்குத்தானே சுருக்கமாகச் சொல்வது சிறந்தது. ஆனால் அதான், இகாமத் இல்லாமலும் தொழலாம்; அதனால் தொழுகை பாதிக்கப்படாது.
தொழுகையில் ஒரு தேவை ஏற்பட்டால், முன் பின் நகர்வது தவறில்லை. உலகத் தேவைகளுக்காக (உதாரணமாக, கதவைத் திறக்கவோ அல்லது வேறு அவசரத் தேவைக்காகவோ) நாம் முன்பின் நடந்து கொள்வது மார்க்கத்தில் தடையற்ற ஒரு விஷயமாகும். ஆனால், கிப்லாவைத் திசை திருப்புகின்ற அமைப்பிலேயோ, தொழுகையைப் பாழாக்குகின்ற அளவிலோ அதிகமாக நடந்து திரிகின்ற நிலைமை இருக்கக்கூடாது.