குர்ஆன் மனனம் செய்து மறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறாங்க. ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், குர்ஆன் வேகமாக மனனமிட்டு அதை நாம் பேணி வராதுவிட்டால், ஒட்டகம் கயிற்றை அறுத்துக்கொண்டு வேகமாக ஓடுவதைப்போல அது நம்மளை விட்டு வேகமாகச் சென்றுவிடும். குர்ஆனை பாடமாக்கிவிட்டு, அதை வேண்டுமென்றே அலட்சியப்படுத்தி மறப்பது ஒரு மிகப்பெரிய குற்றம் என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எனவே குர்ஆனை ஒருவர் மறக்காமல் இருக்க அனுதினமும் அதைப் பேணி வரவேண்டும், ஓதிப் பாதுகாத்து வரவேண்டும்.
அதற்கு மேலதிகமாக, ஒருவர் முழு முயற்சி செய்தும் மனித இயல்பால் மறப்பது என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ஒருமுறை பள்ளியில் ஒரு மனிதர் ஓதிக்கொண்டிருப்பதைக் கேட்டு, "அவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்ய வேண்டும், நான் ஒரு சூராவில் வரக்கூடிய ஒரு வசனத்தை மறந்திருந்தேன், அவர் அதை எனக்கு ஞாபகப்படுத்திவிட்டார்" என்று கூறினார்கள். மனிதன் என்ற அடிப்படையில் ஒரு வசனம் மறக்கும்; அந்த வசனத்தின் ஓடல் ரசூலுல்லாஹ்வுக்கு மறந்திருந்தது. அந்த மனிதர் ஓதுகிற நேரத்தில்தான் அந்த வசனம் ரசூல் (ஸல்) அவர்களுக்கு ஞாபகம் வந்தது என்ற செய்தியை நாம் பார்க்கிறோம். எனவே, இயன்ற அளவுக்கு மறக்காமல் இருக்கப் பேணிக்கொள்ள வேண்டும்; அப்படிப் பேணிக்கொண்டிருந்தும் ஒரு சிலர் மறந்தால் அல்லாஹுத்தஆலா அதற்குக் குற்றம் பிடிக்க மாட்டான்.