கணவன் ஹஜ்ஜில் மரணித்துவிட்டால், அந்த மனைவி இத்தா மற்றும் ஹஜ்ஜுடைய கிரியைகள் ஆகிய இரண்டையும் சேர்த்தே கடைபிடிக்க வேண்டும்.
இத்தா என்றால் உடனடியாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து முடங்கி விடுவது என்று பலர் நினைக்கிறார்கள்; அப்படியல்ல. இத்தா என்பது கணவன் மரணித்ததன் காரணமாக, 4 மாதம் 10 நாட்கள் வரை மறுமணம் முடிப்பதில்லை என்ற உறுதியான முடிவோடு இருப்பதுதான் அதன் அடிப்படை. எனவே, அவர் ஹஜ்ஜுடைய கிரியைகளை (தவாஃப், குர்பானி, கல்லெறிதல் போன்றவற்றை) செய்து கொண்டு, அந்த மறுமணம் முடிப்பதில்லை என்ற இத்தாவுடைய நியத்தோடு தாராளமாக அந்தப் புனிதப் பயணத்தில் இருக்கலாம்.
ஹஜ்ஜுடைய வேலைகளை எவ்வளவு அவசரமாக முடிக்க முடியுமோ (உதாரணமாக 15 நாட்களில்) அவ்வளவு அவசரமாக முடித்துவிட்டு அவர்கள் ஊர் திரும்ப வேண்டும். ஊருக்குத் திரும்பிய பின், அலங்காரமான ஆடைகளை அணியாமல், ஆபரணங்கள் அணியாமல், அஜ்னபி (அந்நிய) ஆண்களை விட்டும் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் பொதுவான இத்தா காலத்து ஒழுக்கங்களைப் பேணி வீட்டிலே இருக்க வேண்டும். ஹஜ்ஜில் கழித்த அந்த 15 நாட்களையும் இத்தா கணக்கில் சேர்த்துக்கொண்டு, மீதமுள்ள நாட்களை அவர்கள் ஊரில் தொடரலாம். 4 மாதம் 10 நாட்களுக்குப் பிறகு அவர்கள் விரும்பினால் மறுமணம் பேசலாம்.