அல்லாஹு ரப்புல் ஆலமீன் உஸ்மான் (ரழி) அவர்களைப் பார்த்து வெட்கப்படுகின்றான் என்கின்ற எந்தவொரு செய்தியையும் காண முடியவில்லை. மாற்றமாக, "மலக்குமார்கள் (வானவர்கள்) வெட்கப்படுகின்றவரைப் பார்த்து நானும் வெட்கப்படக் கூடாதா?" என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு அறிவிப்புதான் இருக்கிறது.
ஒரு மனிதர் எந்த அளவுக்குக் கூச்சப்படுவாரோ, வெட்கப்படுவாரோ அவருக்கு முன்னால் நாங்களும் அதே அளவுக்கு வெட்கப்படுவது ஒரு ஈமானிய இயல்பாகும். எங்களது வெட்கம் என்பது, முன்னால் உள்ளவர் எந்த அளவுக்கு வெட்கப்படுகிறாரோ அந்த அளவுக்கு எங்களது வெட்கமும் பொதுவாக இருக்கும். அந்த அடிப்படையில், உஸ்மான் (ரழி) அவர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர் என்கின்ற அடிப்படையில்தான் மலக்குமார்கள் வெட்கப்படக்கூடிய ஒரு மனிதர் என்று ரசூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.