ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஸகாத் தொகையை குர்ஆன் கூறும் எட்டு கூட்டத்தினருக்கும் ஒரே தடவையில் பிரித்துக் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒருவருக்கு மட்டும்

ஸகாத்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஸகாத் தொகையை குர்ஆன் கூறும் எட்டு கூட்டத்தினருக்கும் ஒரே தடவையில் பிரித்துக் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒருவருக்கு மட்டும் முழுமையாகக் கொடுக்கலாமா?
பதில்
பதில்:

ஸகாத்தை பொறுத்தவரைக்கும் அதனை எவ்வாறு கொடுப்பது என்கின்ற முழுமையான உரிமை உங்களது கையிலேயே உள்ளது . உதாரணமாக, உங்களுக்கு 10,000 ரூபாய் ஸகாத் கடமையாகியிருந்தால், அதனை ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் கொடுக்கலாம் அல்லது ஒரே அடியாக 10,000 ரூபாயையும் ஒருவருக்கு மட்டுமே கொடுக்கலாம் . மார்க்கத்தில் ஸகாத்தை எட்டு கூட்டத்தினருக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டதன் அர்த்தம், அந்த எட்டுப் பிரிவினருக்கு மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்பதே தவிர, ஒவ்வொரு தடவையும் அந்த எட்டு கூட்டத்தினருக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்பதல்ல . நீங்கள் அந்த எட்டுப் பிரிவினரில் ஒருவருக்கோ, இரண்டு பேருக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கோ கொடுக்கலாம்; ஆனால் அந்த எட்டுப் பிரிவினரைத் தாண்டி வேறு எவருக்கும் கொடுக்கக் கூடாது .

எனவே, நீங்கள் நிலைமையை அவதானித்து, உங்களுக்கு எது பொருத்தம் என்று முடிவெடுக்க வேண்டும் . எல்லோருக்கும் கொடுக்க வேண்டுமே, எல்லோரும் எதிர்பார்ப்பார்களே என்று யோசிக்காமல், ஒரு தடவைக்கு ஒருவருக்கு மட்டும் அந்த முழுத் தொகையையும் கொடுத்தால் அவருக்கு ஒரு பெரிய பிரயோஜனம் இருக்குமாக இருந்தால், அந்த விஷயத்தை மனதில்கொண்டு ஒருவருக்கு முழுமையாகக் கொடுப்பதே மிகவும் சிறந்தது . ஒருவேளை நீங்கள் அவ்வாறு ஒருவருக்கு மட்டும் கொடுத்தால் மற்ற உறவினர்கள் அல்லது அண்டை வீட்டார் பகைத்துக்கொள்வார்கள், மனக்கசப்புகள் ஏற்படும் என்ற நிலை இருந்தால் பிரித்துக் கொடுப்பது நல்லது . ஆனால், அவர்கள் பகைக்காமல் நல்ல முறையில் நடந்துகொள்வார்கள் என்றால், அவர்களில் யார் மிகவும் தேவையுடையவரோ அவரைக் கவனித்து முழுமையாகக் கொடுப்பது சிறந்தது . எதுவாக இருந்தாலும் ஸகாத்தை எவ்வாறு கொடுப்பது, ஒரேயடியாகக் கொடுப்பதா அல்லது பலருக்குப் பிரித்துக் கொடுப்பதா என்பதை தீர்மானிக்கும் முழு உரிமையும் உங்களிடமே உள்ளது; நீங்கள் எப்படிப் பிரித்துக் கொடுத்தாலும் அதில் குற்றவாளியாக மாட்டீர்கள் .

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →