கேள்வி
கணவனின் விருப்பத்திற்காகச் சிறிய அளவில் மூக்குத்தி அணிந்து, முகம் திறந்து வெளியே செல்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்
பதில்:
முகம் திறந்து செல்வதை மார்க்கம் அனுமதிக்கிறது; முகம் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை. ஆனால், கணவனின் விருப்பமாக இருந்தாலும் மூக்குத்தி அணிவது மார்க்கத்தில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
கணவனுடைய விருப்பம் என்பது மார்க்கத்திற்கு முரணில்லாததாக இருக்க வேண்டும். மூக்குத்தி அணிவது என்பது இந்துக்களின் கலாச்சாரமாகும். "யார் பிற சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடக்கிறாரோ, அவர் அவர்களைச் சார்ந்தவரே" என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையாகும். எனவே, பிற மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் அமைப்பிலான மூக்குத்தியைத் தவிர்க்க வேண்டும். இதனை மார்க்கத்தின் அடிப்படைக்கு முரணானது என்பதைக் கணவரிடம் பக்குவமாக எடுத்துக் கூறி புரியவைக்க வேண்டும்.