கேள்வி
இளைஞர்களால் பள்ளிவாசலில் இப்தார் மற்றும் கியாமுல் லைல் தொழுகைக்குப் பின் வழங்கப்படும் உணவுகளுக்கு ஸகாத் பணத்தைக் கொடுக்க முடியுமா?
பதில்
பதில்:
இல்லை, இதற்கு ஸகாத் பணத்தைக் கொடுக்கக் கூடாது. பொதுவாக இப்தாருக்காக அல்லது பள்ளிவாசலில் பொதுவான சேவைகளுக்காக உணவு வழங்கும் காரியங்களுக்கு ஸகாத் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது.
ஸகாத் என்பது ஏழைகள், கஷ்டப்படுபவர்கள் மற்றும் கடனாளிகள் என்று மார்க்கம் வரையறுத்த குறிப்பிட்ட தகுதியுடையவர்களுக்கு மட்டுமே உரியதாகும். இப்தார் போன்ற பொதுவான தேவைகளுக்கு ஸதகா (தான தர்மங்கள்) பணத்திலிருந்து மட்டுமே கொடுக்கலாமே தவிர, ஸகாத் பணத்திலிருந்து கொடுக்கக் கூடாது.