முதலாவது எழுதப்பட்ட ஹதீஸ் கிரந்தம் என்று சொன்னால் அது இமாம் மாலிக் அவர்களுடைய "முஅத்தா" ஆகும். அது மிகவும் ஆதாரப்பூர்வமான ஒரு கிரந்தம். அதுக்குப் பிறகுதான் ஏனைய ஹதீஸ் நூல்கள் எழுத ஆரம்பிக்கப்பட்டன. பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது: "குர்ஆனைத் தொகுத்த மாதிரி அன்றைக்கே ஹதீஸையும் தொகுத்திருந்தால் பிரச்சனை முடிந்திருக்குமே!" என்று. ஆனால் ஹதீஸைத் தொகுத்தால்தான் பிரச்சனையே எழுந்திருக்கும். குர்ஆனைப் பொறுத்தவரைக்கும் 6000 சொச்சம் வசனங்கள் வஹியாக இறங்கியது, ரசூலுல்லாஹ் அதை அப்படியே நபித்தோழர்கள் கையில் கொடுத்தார்கள். ஆனால் ஹதீஸை எடுத்துக்கொண்டால் ரசூலுல்லாஹ் செய்தாலும் ஹதீஸ், சொன்னாலும் ஹதீஸ், பேசினாலும் ஹதீஸ், அனுமதித்தாலும் ஹதீஸ். இது ரசூலுல்லாஹ்வுடைய முழு வாழ்க்கை (Life) ஆகும்.
ஒரு 10,000 நபித்தோழர்கள் ஜிகாதிலேயும், ஈராக்கிலும், சிரியாவிலும் பரவியிருந்தார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் எல்லா ஹதீஸையும் நான் தொகுக்கப் போகிறேன் என்று அறிவித்திருந்தால், எல்லாரும் வந்து சேர வேண்டும். ஒரு நபித்தோழரைக் கூட விடக்கூடாது. அவர் மூலை முடுக்கில் இருந்தாலும் கூட்டிக்கொண்டு வர வேண்டும். தொகுத்து முடித்த பிறகுதான் ஈராக்கிலிருந்து ஒருத்தர் வருவார், சிரியாவிலிருந்து ஒருத்தர் வருவார். உஸ்மான் (ரழி) மௌத் ஆகியிருப்பார்கள். அப்போது வந்து, "நான் ரசூலுல்லாஹ் இப்படிச் செய்வதைக் கண்டேன்" என்று அவர் சொன்னால், "புக்கில் இல்லையே, நீ பொய் சொல்றாய்" என்று நிராகரிக்கப்படுமா இல்லையா? ஹதீஸ்கள் முழுமையாக நிராகரிக்கப்படும். ஹதீஸ் என்பது ஒவ்வொரு நபித்தோழரும் தன்னுடைய மனசுல சுமந்திருக்கிற விஷயமாகும். அப்ப எல்லா நபித்தோழர்களையும் கூட்டுவது கஷ்டம். அப்படியே எடுத்தாலும் இன்னொரு ஆயிரம் செய்திகள் தப்பிப் போயிருக்கும். இதனால்தான் அல்லாஹுத்தஆலா அதை ஓப்பனாக விட்டிருந்தான். பல இஸ்லாமிய அறிஞர்களை மூலை முடுக்குகளுக்குப் போக வைத்து, தொகுத்து தொகுத்து ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுக்குப் பிறகு "இனி ஹதீஸை இட்டுக்கட்ட முடியாது" என்ற இடத்துக்கு அல்லாஹ் கொண்டு வந்து வைக்கிறான். அது எப்படி வைக்கிறான் என்றால், பலவீனமான அறிவிப்பாளர் வரிசை, பலமான வரிசை, இட்டுக்கட்டப்பட்டவை என எல்லாம் சேர்க்கப்பட்டிருக்கிறது; இதிலிருந்து தேர்ந்தெடுக்கும் அறிவு நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இதுதான் ஹதீஸுக்குப் பாதுகாப்பு. நமது குறை மூளைக்கு இது பாதுகாப்பு இல்லாமல் இருக்கலாம், ஆனால் படைத்த ரப்புக்கு இதுதான் பாதுகாப்பு.
உதாரணமாக, அப்படியே உஸ்மான் (ரழி) காலத்திலேயே தொகுத்திருந்தால் எப்படி தொகுப்பார்கள்? ஒரு அளவுகோல் ஒன்று இருக்குமே. "ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு முறை வாய் கொப்பளித்துவிட்டு அதைத் துப்பினார்" என்று ஒரு சின்ன பிள்ளை அறிவிக்கிற செய்தி ஹதீஸில் வருமா? "இதெல்லாம் ஒரு செய்தியாக எழுத வேண்டிய அவசியம் இல்லை" என்று விட்டுவிடுவார்கள். இன்றைக்கு அது பெரிய ஹதீஸ். ரசூலுல்லாஹ் சிறுவர்களோடு எப்படி விளையாட்டாக நடந்து கொண்டார்கள் என்பதெல்லாம் மிக முக்கியமான பகுதியாக வைக்கப்படுகிறது. அந்த சஹாபி ரசூலுல்லாஹ்வைக் கண்டாரா இல்லையா என்பதை வைத்து முக்கியப்படுத்துகிறார்கள். எனவே தொகுப்பு என்பது இந்த அறிவார்ந்த அடிப்படையில்தான் பல காலங்களுக்குப் பிறகு மிக நுணுக்கமாக நடந்தது.