இவ்வாறான நிகழ்ச்சிகளைப் பள்ளிவாசல்கள் முற்றுமுழுதாகத் தவிர்க்க வேண்டும். இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான சினிமாக்கள், இசைகள், வட்டி சம்பந்தமான விளம்பரங்கள் மற்றும் ஆபாசமான காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, அவர்கள் இலவசமாக இஃப்தார் உணவு வழங்குகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நமது பள்ளிவாசல்களைப் பயன்படுத்த இடமளிக்கக் கூடாது.
அவர்களைப் பள்ளிக்கு அழைப்பதன் மூலம், நாம் அந்தத் தவறான நிறுவனத்தை ஊக்குவிப்பவர்களாகவும், நாமே அவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுப்பவர்களாகவும் மாறிவிடுவோம். ஹலாலான விஷயங்களாக இருந்தாலும்கூட பள்ளிவாசல்களை இதுபோன்று விளம்பரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என்றிருக்க, முற்றுமுழுதாக ஹராமான செயல்பாடுகளைக் கொண்ட நிறுவனங்களை அனுமதிப்பது பெரும் குற்றமாகும். எனவே, பள்ளிவாசல் நிர்வாகிகள் இது போன்ற விளம்பர நோக்கிலான இஃப்தார்களை ஏற்பாடு செய்வதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பொதுமக்களும் இத்தகைய நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். பள்ளிவாயல்களைக் கேலிக்கூத்தாகப் பயன்படுத்துகின்ற குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.