ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இமாம் இப்னு தைமியா அவர்கள் தமது ''முஸவ்வதா'' நூலில் "சஹாபாக்கள் ஹதீஸ்களை மறுத்தது போல, யாராவது ஹதீஸ்களை மறுத்தால் அவர்கள

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
இமாம் இப்னு தைமியா அவர்கள் தமது ''முஸவ்வதா'' நூலில் "சஹாபாக்கள் ஹதீஸ்களை மறுத்தது போல, யாராவது ஹதீஸ்களை மறுத்தால் அவர்களை காபிர்கள் என்றோ வழிகேடர்கள் என்றோ சொல்லக்கூடாது" என்று கூறியிருக்க, நீங்கள் எப்படி தர்க்கரீதியாக ஹதீஸ்களை மறுப்பவர்களை வழிகேடர்கள் என்று சொல்கிறீர்கள்?
பதில்
பதில்:

இமாம் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தமது ''முஸவ்வதா'' (Al-Musawwadah - இப்னு தைமியா, அவரது தந்தை, மற்றும் பாட்டனார் ஆகியோர் இணைந்து எழுதிய முழுமையடையாத நூல்) என்ற நூலில், ஹதீஸ்களை மறுப்பவர்களை காபிர்கள் என்றோ வழிகேடர்கள் என்றோ சொல்லக்கூடாது என்று எங்குமே குறிப்பிடவில்லை. ஒரு செய்தியை இன்னொரு செய்தியோடு ஆதாரமாகக் காட்டி மறுக்கும் போது, அதனை நாம் முழுமையான மறுப்பாகக் கொள்ளக்கூடாது என்றுதான் அவர் கூறுகிறார். மேலும், அந்த நூலில் இஜ்மாவுக்கு முரணாக வரும் ஹதீஸ்களை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும், குர்ஆனுக்கு முரண்படுவது போல் தோன்றும் ஹதீஸ்களை எப்படி இணைத்து விளங்க வேண்டும் என்பது குறித்தும் அவர் தெளிவாக விளக்கியுள்ளார்.

இரண்டாவதாக, ஹதீஸ்களைத் தங்களது ஆய்வின் அடிப்படையிலோ அல்லது மார்க்க ரீதியான வேறு ஆதாரங்களின் அடிப்படையிலோ மறுப்பவர்களை நாம் ஒருபோதும் காபிர்கள் என்று சொல்வதில்லை; அப்படிச் சொல்லவும் கூடாது. ரசூல் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தியை வேண்டுமென்றே முகத்திற்கு நேராக மறுப்பது போல நாம் அவர்களைப் பார்ப்பதில்லை.

ஆனால், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்ற பெயரில் தங்களது பகுத்தறிவை முன்வைத்து, குர்ஆன் வசனங்களோடு ஹதீஸ்களைத் திணித்து வேண்டுமென்றே முரண்பாடுகளைக் கற்பிக்கும் கொள்கையைத்தான் நாம் வழிகேடு என்று கூறுகிறோம். அப்படிப்பட்டவர்களை வழிகேடர்கள் என்று சொல்லக்கூடாது என இமாம் இப்னு தைமியா எங்குமே சொல்லவில்லை. எனவே இப்னு தைமியா அவர்களின் கூற்றைத் தவறாகப் புரிந்து கொண்டு உங்களது வாதத்திற்கு ஆதரவாகத் திரித்துக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →