ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு எப்பொழுது, எதற்காகச் செய்ய வேண்டும்?

தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு எப்பொழுது, எதற்காகச் செய்ய வேண்டும்?
பதில்
பதில்:

தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு எப்பொழுது செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள, தொழுகையின் ருக்குன் மற்றும் வாஜிபுகளைப் பற்றி அறிய வேண்டும்.

1. ருக்குன்களை (கட்டாயக் கடமைகளை) விட்டால்:
சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல், ருகூஉ செய்தல், ஸஜ்தா செய்தல், அல்லது இறுதி அத்தஹிய்யாத் இருப்பு போன்றவற்றை ருக்குன்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. இவற்றை ஒருவர் தொழுகையில் மறந்து விட்டுவிட்டால், எந்த ரக்அத்தில் அந்தக் குறை நடந்ததோ அந்த முழு ரக்அத்தையும் அவர் மீட்டித் தொழ வேண்டும் (அந்த ரக்அத் கணக்கில் கொள்ளப்படாது). அதோடு, தெரியாமல் நடந்த அந்தத் தவறுக்காக அவர் தொழுகையின் இறுதியில் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.

2. வாஜிபுகளை (கடமைகளை) விட்டால்:
முதல் அத்தஹிய்யாத் இருப்பை (நடு இருப்பு) விட்டுவிட்டு எழுந்துவிடுதல் அல்லது சூரத்துல் ஃபாத்திஹாவிற்குப் பின்னால் ஓத வேண்டிய துணை சூராவை ஓத மறந்துவிடுதல் போன்றவற்றைச் செய்தால், அந்த ரக்அத்தை மீட்டித் தொழ வேண்டிய அவசியமில்லை. இந்த வாஜிபுகள் விடுபட்டதனால் ஏற்பட்ட குறைக்காக, தொழுகையின் இறுதியில் வெறும் ஸஜ்தா ஸஹ்வு செய்தால் மட்டும் போதுமானது. ஸஜ்தா ஸஹ்வு என்பது தொழுகையில் ஒன்றை மறந்தால், கூட்டினால் அல்லது குறைத்தால் செய்யப்பட வேண்டிய ஒரு பரிகாரமாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →