தொழுகையினுடைய சட்டங்களைப் புரிந்துகொண்டால் ஸஜ்தா ஸஹ்வு எப்போது செய்ய வேண்டும் என்பதை மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். தொழுகையில் ''ருக்குன்'' (கட்டாயக் கடமைகள்) என்று சில அம்சங்கள் உள்ளன. உதாரணமாக, சூரத்துல் ஃபாத்திஹா ஓதுதல், ருகூஃ செய்தல், நிலையில் நிற்றல், சஜ்தா செய்தல், இறுதி அத்தஹிய்யாத் இருப்பு ஆகியவற்றை ருக்குன்கள் என்பார்கள். இவற்றை ஒருவர்தெரியாமல் விட்டுவிட்டால், அந்த ரக்அத் முழுமையாகச் செல்லாது. அவர் விடுபட்ட அந்த ரக்அத்தை மீண்டும் தொழுதுவிட்டு, இறுதியாக ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்.
அடுத்ததாக ''வாஜிபுகள்'' என்று சில கடமைகள் உள்ளன. உதாரணமாக, இரண்டாவது ரக்அத்தில் உட்காரும் முதல் அத்தஹிய்யாத் இருப்பு, சூரத்துல் ஃபாத்திஹாவிற்குப் பின்னால் ஓதும் துணை சூரா போன்றவற்றை ஒருவர்தெரியாமல் விட்டுவிட்டால், அவர் அந்த ரக்அத்தை மீண்டும் மீட்டித் தொழ வேண்டிய அவசியமில்லை. தொழுகையின் இறுதியில் ஸஜ்தா ஸஹ்வு செய்தால் மாத்திரம் போதுமானது. ருக்குன்களை விட்டால் அந்த ரக்அத்தை மீட்டிவிட்டு ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும்; வாஜிபுகளை விட்டால் ரக்அத்தை மீட்டாமல் ஸஜ்தா ஸஹ்வு மட்டும் செய்ய வேண்டும் என்பதே இதற்கான சுருக்கமான மார்க்கச் சட்டமாகும்.