ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

முஸ்லிம் அல்லாதவர்களுடைய பணத்தில் (நன்கொடையில்) பள்ளிவாசல் கட்டுவது மார்க்கத்தில் கூடுமா?

தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
முஸ்லிம் அல்லாதவர்களுடைய பணத்தில் (நன்கொடையில்) பள்ளிவாசல் கட்டுவது மார்க்கத்தில் கூடுமா?
பதில்
பதில்:

எவர்களுடைய பணமாக இருந்தாலும் சரி, ஒருவர் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவி செய்ய முன்வந்தால் அதனை ஏற்றுக்கொள்வதில் மார்க்க ரீதியாக எந்தத் தடையுமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களது அன்பளிப்புகளை வாங்கியுள்ளார்கள், அவர்களது உணவுகளை உண்டிருக்கிறார்கள், அவர்களது உதவிகளை ஏற்றிருக்கிறார்கள்.

எனினும், அவர்கள் தரும் அந்த உதவியின் பின்னணியில் தவறான உள்நோக்கங்கள் இருக்கக் கூடாது. உதாரணமாக, அரசியல் லாபம் தேடும் நோக்கம், பள்ளிவாசலில் உரிமைகொண்டாடும் நோக்கம், தங்களது மாற்று மத நிகழ்ச்சிகளை அதில் நடத்திக்கொள்ளலாம் என்ற நோக்கம் அல்லது தாங்கள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்துவதற்காக இவ்வாறு உதவி செய்கிறார்கள் என்ற தவறான நோக்கங்கள் இருக்குமானால் அத்தகைய உதவிகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட தவறான உள்நோக்கங்கள் எதுவுமின்றிப் பொதுவாக உதவி செய்தால் அதனைப் பெற்றுக்கொள்வதில் மார்க்க ரீதியாக எந்தத் தடையுமில்லை.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →