கேள்வி
முஸ்லிம் அல்லாத சகோதரரிடம் எனக்காகப் பிரார்த்தியுங்கள் (Pray for me) என்று சொல்லலாமா?
பதில்
பதில்:
இப்படிச் சொல்வது மார்க்க அடிப்படையில் ஒரு பிழையான நடைமுறையாகும். இறைவனைச் சரியாக நம்பாதவரிடம், இறைவனுக்கு இணைவைப்பவரிடம் நமக்காகத் துஆச் செய்யச் சொல்வது பொருத்தமற்றது.
உலக விஷயங்களில் இறைவன் அவர்களுக்கு ரிஸ்க் (வாழ்வாதாரம்) கொடுத்தாலும், இக்கட்டான நேரங்களில் அவர்கள் அழைக்கும்போது இறைவன் பதிலளித்தாலும், பொதுவான அடிப்படையில் அவர்களது பிரார்த்தனை இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதே மார்க்க நிலைப்பாடாகும். துஆவை ஒரு சாலிஹான (நல்லொழுக்கமுள்ள) முஸ்லிமிடம் கேட்பதே முறை என்றிருக்க, ஒரு முஸ்லிம் அல்லாதவரிடம் சென்று "எனக்காகப் பிரார்த்தியுங்கள்" என்று சொல்வதை ஒரு முஸ்லிம் முற்றுமுழுதாகத் தவிர்க்க வேண்டும். நட்பு ரீதியாகச் சொன்னாலும் சரி, இது கொள்கை ரீதியான ஒரு தவறாக மாறிவிடும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க