கேள்வி
கணவன் மரணித்த போது அறியாமையால் ''இத்தா'' இருக்காத ஒரு பெண், பல வருடங்கள் (உதாரணமாக 30-க்கும் மேற்பட்ட வருடங்கள்) கழித்து இப்போது இத்தா இருக்க வேண்டுமா?
பதில்
பதில்:
கணவன் மரணித்தவுடன் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் ''இத்தா'' இருப்பது ஒரு பெண்ணுக்குரிய மார்க்கக் கடமையாகும். அதனைச் செய்யாமல் விட்டது மிகப்பெரிய பாவமாகும். ஆனால் பல வருடங்கள் கழிந்துவிட்ட நிலையில், இப்போது புதிதாக அவர் இத்தா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் செய்த அந்தத் தவறுக்காக அல்லாஹ்விடத்தில் உண்மையான முறையில் தவ்பா (பாவமன்னிப்பு) தேடிக் கொள்ள வேண்டும்.
மாறாக, கணவன் மரணித்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில் தான் இத்தா இருக்கவில்லை என்ற தவறு ஒரு பெண்ணுக்குத் தெரியவந்தால், எஞ்சியுள்ள (மீதமுள்ள) இரண்டு மாதங்களும் பத்து நாட்களும் அவர் கட்டாயம் இத்தா இருக்க வேண்டும். மரணித்த நாளில் இருந்து கணக்கிடப்படுவதால், காலக்கெடு முடிந்த பின்பு இத்தா இருக்க வேண்டியதில்லை; தவ்பா மட்டுமே அவசியமாகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க