ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

குடும்பப் பிரச்சினைகளின் காரணமாக, கணவன் தனது மனைவியை குறிப்பிட்ட சில உறவினர்களோடு (ஆண்/பெண்) பேசக் கூடாது என்றோ, வீட்டிற

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
குடும்பப் பிரச்சினைகளின் காரணமாக, கணவன் தனது மனைவியை குறிப்பிட்ட சில உறவினர்களோடு (ஆண்/பெண்) பேசக் கூடாது என்றோ, வீட்டிற்கு அனுமதிக்கக் கூடாது என்றோ கூறினால் மனைவி அதனை ஏற்க வேண்டுமா? இதனால் உறவு துண்டிக்கப்பட்ட குற்றத்திற்கு ஆளாக நேரிடுமா?
பதில்
பதில்:

குடும்ப வாழ்க்கை சீராகச் செல்வதற்கு கணவனின் விருப்பு வெறுப்புகளுக்கு மனைவி மதிப்பளிப்பது அவசியமாகும். குடும்ப நிர்வாகத்தில் கணவனுக்கு முக்கியப் பங்கு உண்டு. தான் வெறுக்கும் ஒருவரை (அவர் மனைவியின் உறவினராகவே இருந்தாலும்) தனது வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று கணவன் கூறினால், அதனை மனைவி கட்டாயம் ஏற்க வேண்டும். ரசூல் (ஸல்) அவர்கள், "நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளில் அவர்கள் (மனைவியர்) அனுமதிக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்கள்.

அவ்வாறு கட்டுப்படுவதால் மனைவிக்குத் தனது இரத்த உறவினர்களுடனான உறவைத் துண்டித்த பாவம் வந்து சேராது. மார்க்கச் சட்டங்கள், ஹலால் ஹராம் ஆகியவற்றைத் தவிர்த்து, இத்தகைய விருப்பு வெறுப்பு விவகாரங்களில் கணவனின் கட்டளைக்குக் கட்டுப்படுவது அவசியமாகும். சில நேரங்களில் கணவனின் இத்தகைய முடிவுகள் அநியாயமாகத் தோன்றினாலும், குடும்பப் பிணைப்பைப் பாதுகாப்பதற்காகவும், விவாகரத்து போன்ற மோசமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காகவும் கணவனின் இத்தகைய கட்டுப்பாடுகளைப் பேணி நடப்பதே விவேகமான இஸ்லாமிய வழிகாட்டலாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →