ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பால்மாவில் (Milk Powder) பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக எழும் சர்ச்சைகளில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்ட

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
பால்மாவில் (Milk Powder) பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக எழும் சர்ச்சைகளில் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
பதில்
பதில்:

ஒரு பொருளில் ஹராமான வஸ்துக்கள் கலந்துள்ளதா என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தாமல், நாமாகவே இணையதளத் தகவல்களை வைத்துக்கொண்டு அது ஹராம் என முடிவெடுக்கக் கூடாது. ரசூல் (ஸல்) அவர்கள் உணவு விஷயத்தில் வீணான சந்தேகங்களைக் கிளப்புவதைத் தவிர்த்துள்ளார்கள்.

ஹலால்-ஹராம் விஷயத்தை உறுதிப்படுத்த, அத்துறை சார்ந்த நிபுணர்களும், நம்பகமான மார்க்க அறிஞர்களும் அடங்கிய "ஹலால் சான்றிதழ் வழங்கும் குழுவின்" (Halal Committee) தீர்ப்பைப் பின்பற்றுவதே பாதுகாப்பானது. அவர்கள் முறையாகப் பரிசோதித்து, குறிப்பிட்ட பால்மாவில் பன்றிக் கொழுப்பு இல்லை எனப் பகிரங்கமாக அறிவித்த பின்னும், வீணான சந்தேகங்களை எழுப்புவது மார்க்கத்தில் தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

ஒருவருக்குத் தனிப்பட்ட முறையில் அதில் இரசாயனங்கள் உள்ளதென்றோ அல்லது வேறு காரணங்களினாலோ சந்தேகம் இருந்தால், அவர் தனக்காக அதனைத் தவிர்த்துக் கொள்ளலாம்; ஆனால் அதை ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஹராம் எனத் தீர்ப்பளித்துப் பிரச்சாரம் செய்வது முற்றிலும் பிழையான அணுகுமுறையாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →