மார்க்க ரீதியாக இதில் எந்தத் தடையுமில்லை. கல்வி அல்லது பொருளாதாரம் போன்ற நியாயமான காரணங்களுக்காகத் திருமண ஒப்பந்தத்திற்குப் பின் பிரிந்து வாழ்ந்து, பின்னர் சேர்ந்து வாழ்வதற்கு அனுமதி உண்டு.
உதாரணமாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களை அவர்களது ஆறு வயதில் நிக்காஹ் செய்து, பின்னர் ஒன்பது வயதில்தான் கணவன்-மனைவியாக இணைந்து வாழ்ந்தார்கள். இது ஆயிஷா (ரழி) அவர்கள் சிறு பெண்ணாக இருந்ததால் மட்டுமே லேட்டாக்கப்பட்டது என்று சுருக்கிவிட முடியாது. நிக்காஹ் செய்யும் போதே அவர்கள் சிறு பெண் என்பது நபிகளாருக்குத் தெரியும். எனவே, நிக்காஹ் செய்துவிட்டு நியாயமான காரணங்களுக்காக சேர்ந்து வாழ்வதைப் பிற்போடுவது தவறல்ல.
பின்னர் சேர்ந்து வாழும் நேரத்தில் வலீமா விருந்து கொடுத்து, ஊருக்கு அறிமுகப்படுத்திவிட்டு கணவன்-மனைவியாக வாழ்வதிலும் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையுமில்லை.