ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நாவல்கள், கற்பனைக் கதைப் புத்தகங்கள் வாசிக்கலாமா? அவற்றை எழுதலாமா?

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நாவல்கள், கற்பனைக் கதைப் புத்தகங்கள் வாசிக்கலாமா? அவற்றை எழுதலாமா?
பதில்
பதில்:

கற்பனைக் கதைகள் மற்றும் நாவல்கள் எழுதுவதையும் வாசிப்பதையும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

1. சமூக இலக்குகளைக் கொண்ட நாவல்கள்:
இது முழுக்க முழுக்க கற்பனை, யாரையும் ஏமாற்றுவதற்கோ அவதூறு சொல்வதற்கோ எழுதப்படவில்லை என்பது வாசிப்பவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். சமூகத்தில் உள்ள ஒரு தவறைத் திருத்துவதற்காகவோ, நல்ல விஷயத்தை ஊக்கப்படுத்துவதற்காகவோ நல்ல நோக்கத்துடன் எழுதப்படும் கற்பனைக் கதைகளை எழுதுவதிலும் வாசிப்பதிலும் மார்க்கத்தில் எவ்விதத் தடையுமில்லை. குர்ஆனிலேயே படிப்பினைக்காக சில உதாரணக் கதைகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். (உ-ம்: கஹ்ஃப் அத்தியாயத்தில் வரும் இரு தோட்டக்காரர்கள், இப்னுல் முகஃப்பாவின் ''கலீலா வ திம்னா'' போன்ற நீதிக் கதைகள், வைரமுத்துவின் சில நாவல்கள்).

2. இலக்கற்ற பொழுதுபோக்கு நாவல்கள்:
எந்தவொரு நல்ல இலக்கும் இல்லாமல், வெறும் ரசனைக்காகவும் (Entertainment), நேரத்தைக் கழிப்பதற்காகவும் எழுதப்படும் கதைகள். இவற்றை வாசிப்பது ஹராம் இல்லை என்றாலும், ஒரு முஃமினின் மிக முக்கியமான நேரத்தை வீணடிப்பதாலும், பயனுள்ள வாசிப்புகளைத் தடுத்து திசை திருப்புவதாலும் இதனை முற்றுமுழுதாகக் குறைத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

3. மார்க்கத்திற்கு முரணான நாவல்கள்:
ஆபாசத்தைத் தூண்டும் நாவல்கள், காதலை ஊக்குவிக்கும் நாவல்கள், இஸ்லாமிய மார்க்கத்தைப் பரிகசிக்கும் அல்லது விரசமான நாவல்கள். இவற்றை எழுதுவது, வாசிப்பது, பரிசளிப்பது, பகிர்ந்தளிப்பது என எல்லாமே முற்றுமுழுதாக ஹராமாகும். எனவே, வாசிப்பவர்கள் இந்த மூன்று படித்தரங்களைக் கவனித்து செயல்பட வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →