தொழுகையைப் பொறுத்தவரை, ஒருவருக்கு எவ்வளவு ஆற்றல் உள்ளதோ அவ்வளவுதான் மார்க்கத்தில் அவரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவருக்கு அரபு மொழியறிவும், கருத்துகளை விளங்கும் ஆற்றலும் இருந்தால், அவர் கட்டாயம் வசனங்களை உள்வாங்கி, சிந்தித்துத் தொழ வேண்டும்.
ஆனால், கருத்து விளங்க முடியாவிட்டாலும் குர்ஆனைச் சிறந்த முறையில் உச்சரித்து (தர்த்தீலாக) ஓத முடியும் என்றால், அதுவே அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறிக் கஷ்டப்படுத்துவதில்லை. எனவே, தொழுகை நிறைவேறுவதற்குக் குர்ஆனின் கருத்துகளை விளங்கியிருக்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனை (ஷர்த்) கிடையாது.
எனினும், ஒரு முஸ்லிம் தான் தொழுகையில் ஓதுபவற்றின் பொருளைப் படித்து விளங்கிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். அறியாதவர்கள் தங்களால் இயன்றவரைச் சிறந்த உச்சரிப்புடன் ஓதித் தொழுதால் அதுவே போதுமானதாகும்.