ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தனித்துத் தொழும் பொழுது சப்தமாக ஓதுகின்ற தொழுகைகளை அல்லது மௌனமாக ஓதுகின்ற தொழுகைகளைச் சத்தமிட்டு ஓதலாமா?

தொழுகை ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
தனித்துத் தொழும் பொழுது சப்தமாக ஓதுகின்ற தொழுகைகளை அல்லது மௌனமாக ஓதுகின்ற தொழுகைகளைச் சத்தமிட்டு ஓதலாமா?
பதில்
பதில்:

தனித்துத் தொழுகின்ற நேரத்தில், சாதாரணமாக நமக்குக் கேட்கக்கூடிய அமைப்பிலோ அல்லது அருகில் உள்ள நமது பிள்ளைகளுக்குக் கேட்கக்கூடிய அமைப்பிலோ சத்தமிட்டு ஓதுவதில் எவ்விதத் தவறும் கிடையாது.

சத்தமிட்டு ஓதுதல் மற்றும் மௌனமாக ஓதுதல் என்ற மார்க்கச் சட்டம் பிரதானமாக ஜமாஅத் (கூட்டுத்) தொழுகைகளுக்கே பொருந்தும். தனித்துத் தொழுபவர் தாராளமாகத் தனது வசதிக்கேற்ப ஓதிக்கொள்ளலாம். வீட்டில் தொழுபவர், தனது ஓதுதல் மற்றவர்களுக்கு இடையூறாக இல்லாத பட்சத்தில், சுன்னத்தான தொழுகையாக இருந்தாலும் சரி, ஃபர்ளான தொழுகையாக இருந்தாலும் சரி, சத்தமிட்டு ஓதுவதில் மார்க்க ரீதியாக எவ்விதத் தடையும் இல்லை.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →