ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தண்ணீரில் குர்ஆன் வசனங்களை ஓதி அல்லது குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாள்களைத் தண்ணீரில் கரைத்துக் குடிப்பது மார்க்கத்தில்

குர்ஆன் அகீதா

← முந்தையஅடுதது →
கேள்வி
தண்ணீரில் குர்ஆன் வசனங்களை ஓதி அல்லது குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட தாள்களைத் தண்ணீரில் கரைத்துக் குடிப்பது மார்க்கத்தில் ஆகுமானதா?
பதில்
பதில்:

இல்லை, இது மார்க்க ரீதியாகக் கூடாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்குர்ஆன் வசனங்களைத் தண்ணீரில் ஓதியதாகவோ அல்லது அல்குர்ஆன் எழுத்துக்களை எழுதிக் கரைத்துக் குடித்ததாகவோ எந்தவிதமான ஆதாரப்பூர்வமான செய்திகளும் கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோய்களுக்கு மந்திரிப்பதற்கான சில முறைகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். ஆனால் அந்த எந்த முறைகளிலும் இது போன்ற செயல்கள் இடம்பெறவில்லை. நபிகளார் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு வழிமுறையை யார் செய்தாலும் அது பித்அத் (புதிதாக உண்டாக்கப்பட்ட செயல்) என்பதில் சந்தேகமில்லை. சில அறிஞர்கள் இதனைத் தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சரிகண்டிருந்தாலும், ஒவ்வொருவருடைய அனுபவமும் மார்க்க வழிமுறையாக ஒருபோதும் மாறிவிட முடியாது. எனவே, இது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு பித்அத்தான செயலாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →