ஹதீஸ்களைப் பார்க்கும்போது, ஜும்ஆவுக்கு இத்தனை பேர்தான் இருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் வரவில்லை. இதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் 40, 400, 200, 5, 4, 3 எனப் பல எண்ணிக்கைகள் சொல்லப்படுகின்றன.
ஆனால், ஜும்ஆவைப் பொறுத்தவரைக்கும் அது ஐவேளை தொழுகை நடத்தப்படக்கூடிய ஒரு பள்ளிவாயிலில் நிகழ்த்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் கருதப்பட வேண்டிய நிபந்தனை ஆகும். ஐவேளை தொழுகை நடைபெறாத இடங்களில் நடத்தப்படும் ஜும்ஆக்கள் ஜும்ஆவாகக் கருதப்பட மாட்டாது. இப்படிப்பட்ட பள்ளிவாயிலில் ஒரு ஊரில் மூன்று பேர்தான் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் ஜும்ஆ நடத்தலாம். இரண்டு பேர்தான் இருக்கிறார்கள் என்றாலும், ஒருவர் ஜும்ஆ நிகழ்த்த மற்றவர் கேட்கக்கூடிய நிலைமை இருந்தால், ஜமாஅத் தொழுகைக்கு எப்படி இரண்டு பேர் இருந்தால் நிறைவேறுமோ அதேபோல ஜும்ஆவும் நிறைவேறும். ஜமாஅத்துக்கும் ஜும்ஆவுக்கும் எண்ணிக்கையில் இஸ்லாம் வித்தியாசப்படுத்தியதாகக் காண முடியவில்லை. ஆனால் அது ஐவேளை தொழுகை நடக்கும் பள்ளிவாயிலாக இருக்க வேண்டும்.