கேள்வி
ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு எத்தனை ரக்அத்கள் சுன்னத் தொழுகை நிறைவேற்ற வேண்டும்?
பதில்
பதில்:
ஜும்ஆவுக்குப் பின்னால் இரண்டு ரக்அத்களும் சுன்னத்தாகத் தொழலாம், நான்கு ரக்அத்களும் தொழலாம். ரசூல் (ஸல்) அவர்கள் ஜும்ஆவிற்குப் பிறகு இரண்டு ரக்அத்களும் தொழுதுள்ளார்கள், நான்கு ரக்அத்களும் தொழுதுள்ளார்கள்.
சிலர், "பள்ளியில் தொழுதால் நான்கு ரக்அத்துகள் தொழ வேண்டும், வீட்டில் தொழுதால் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும்" என்று பிரிக்கின்றனர். ஆனால் இதற்கு மார்க்கத்தில் எந்தவிதமான ஆதாரமோ பிரிப்போ இல்லை. ஒரு நபர் விரும்பினால் பள்ளியிலும் இரண்டு அல்லது நான்கு தொழலாம், அதேபோல வீட்டிலும் இரண்டு அல்லது நான்கு தொழலாம். எங்கு தொழுதாலும் இரண்டு அல்லது நான்கு ரக்அத்கள் தொழுவது சுன்னத்தாகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க