விடுபட்ட நோன்பை அடுத்த ஷஃபான் 15-க்குள் கட்டாயம் பிடித்துவிட வேண்டும் என்று மார்க்கத்தில் எந்தச் செய்தியும் இல்லை; அது முற்றிலும் பிழையான கருத்தாகும்.
ரமழானில் விடுபட்ட நோன்பை அடுத்த ரமழான் வருவதற்குள் பிடித்துக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள், "எனக்கு விடுபட்ட நோன்பை அடுத்த ஷஃபான் மாதத்தில்தான் நோற்க முடிந்தது" என்று கூறிய ஹதீஸ் உள்ளது. அதற்காக ஷஃபானுக்குள் நோற்றே ஆக வேண்டும் என்று நபிகளார் (ஸல்) கட்டளையிட்டதாக அர்த்தமில்லை; ஆயிஷா (ரழி) அவர்களுக்கு அந்த மாதத்தில்தான் வாய்ப்புக் கிடைத்தது என்பதே அதன் பொருளாகும்.
ஒருவர் அடுத்த ரமழானுக்குள்ளும் விடுபட்ட நோன்பை நோற்கவில்லை என்றால், அதற்கு அடுத்த வருடமும் அதனைப் பிடித்துக் கொள்ளலாம். இருப்பினும், நமது மரணம் எப்போது வரும், நமது ஆரோக்கியம் எப்போது மாறும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, கடமையான நோன்புகளைப் பிற்போடாமல் இயன்றவரை விரைவாக (அடுத்த ரமழானுக்குள்ளாகவே) நிறைவேற்றுவதுதான் இறையச்சத்திற்கும், நமது கால சூழ்நிலைக்கும் மிகவும் பொருத்தமானதாகும்.