ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

சீதனம் வாங்கக்கூடாது என்ற உறுதியோடு ஒருவர் முறைகேடாக எடுத்துவிட்ட சீதனத்தை, அவர் தனது தவறை உணர்ந்து எவ்வாறு திருப்பிக் க

ஸகாத்

← முந்தையஅடுதது →
கேள்வி
சீதனம் வாங்கக்கூடாது என்ற உறுதியோடு ஒருவர் முறைகேடாக எடுத்துவிட்ட சீதனத்தை, அவர் தனது தவறை உணர்ந்து எவ்வாறு திருப்பிக் கொடுக்க வேண்டும்?
பதில்
பதில்:

சீதனத்தை முறைகேடாகப் பெற்ற ஒருவர் திருந்தி அதனைத் திருப்பிக் கொடுக்க நினைத்தால் சில கட்டாய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

முதலாவதாக, யாரிடம் அந்தச் சொத்துக்களைப் பெற்றாரோ (மாமனார், மனைவி, மனைவியின் சகோதரர்கள் போன்றோரிடம்) அவர்களிடம் மனமுவந்து மன்னிப்பு கேட்க வேண்டும். "நான் செய்தது பிழை, பலருக்கும் கெட்ட முன்மாதிரியாக ஆகிவிட்டேன்" என்று தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பது மிகவும் அவசியம்.

இரண்டாவதாக, எந்தப் பொருளை எவ்வாறு எடுத்தாரோ அதே பொருளாகவோ அல்லது அதன் அதே அளவிலோ திருப்பிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக, நகையாக எடுத்தால் அதே பவுன் அளவிலான நகையாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் (அதன் தற்போதைய சந்தை மதிப்பு கூடினாலும் சரி குறைந்தாலும் சரி). நிலமாக அல்லது வீடாக எடுத்தால் அதையே திருப்பிக் கொடுக்க வேண்டும். பணமாக எடுத்தால் எவ்வளவு பணமோ அதை அப்படியே திருப்பிக் கொடுக்க வேண்டும்.

அவர்கள் மனமுவந்து "நாங்கள் உங்களை மன்னித்துவிட்டோம், இதை நீங்கள் தரத் தேவையில்லை" என்று முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ விட்டுத்தந்தால் அது அவர்களின் உரிமையாகும்; அப்போது நீங்கள் மன்னிக்கப்பட்டவராகி விடுவீர்கள். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் மன்னிக்கவோ விட்டுத்தரவோ இல்லை என்றால், நீங்கள் கட்டாயம் அந்தச் சொத்தைத் திருப்பிக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →