ஒருவருக்கு கம்பெனியில் இருந்து அன்பளிப்பாக கார் தரப்படுகிறதென்றால், அதை அவர் முன்கூட்டியே ரிக்வஸ்ட் பண்ணாமல், எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்து இடாமல், பணமும் கட்டாமல் இருந்தால் அது அவருக்கு ஹலாலானது. முதலாளி பேங்க் ஊடாக வட்டி அடிப்படையில் இன்ஸ்டால்மெண்ட்டில் வாங்குவது அவர் செய்கின்ற குற்றமே தவிர, அன்பளிப்பாகப் பெறுபவருக்கு மார்க்க ரீதியாக அதில் ஹராம் இல்லை.
ஆனால், இதிலே மார்க்க ரீதியாக ஒரு தீமையை வெறுக்க வேண்டும் என்ற மிக முக்கியமான கடமை இருக்கிறது. உங்களுக்குத் தரப்படும் அன்பளிப்பு வட்டி மூலமாகப் பெறப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்தும், அதைச் சிரித்துக்கொண்டு மகிழ்ச்சியாக வாங்குவது ஒரு முஃமினுக்குரிய தீமையை வெறுக்கும் பண்புக்கு முரணானது. "ஒரு தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும், அல்லது வாயால் தடுக்க வேண்டும், குறைந்தபட்சம் மனதாலாவது வெறுக்க வேண்டும்" என்பது நபிமொழி.
எனவே, பணிவாகவும் கனிவாகவும் உங்கள் முதலாளியிடம் "எனக்கு அன்பளிப்பு தருவதை நான் மனமுவந்து ஏற்கிறேன், ஆனால் அதை பேங்க் ஊடாக வட்டி அடிப்படையில் நீங்கள் தருவது எனக்கு மார்க்க ரீதியாகத் திருப்தியில்லை" என்று நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும். நீங்கள் அப்படிச் சொல்வதனால் அவர் வட்டி இல்லாத வேறு ஹலாலான மாற்று வழியைத் தேடலாம். எனவே, மார்க்க ரீதியாக அதை நீங்கள் பயன்படுத்துவது ஹராம் இல்லையென்றாலும், தீமையை வெறுத்தல் என்ற உங்கள் கடமையை நீங்கள் உறுதியாகச் செய்ய வேண்டும் என்பதே மார்க்க உபதேசமாகும்.