கேள்வி
உம்ரா செய்து முடித்த பின் முடியைக் குறைக்கவோ அல்லது மழிக்கவோ மறந்தவர் என்ன செய்ய வேண்டும்?
பதில்
பதில்:
உம்ரா செய்து முடித்துவிட்டு, முடியைக் குறைக்கவோ அல்லது மழிக்கவோ மறந்து ஊருக்குப் போய்விட்டாலோ, வேறு காரியங்களில் ஈடுபட்டுவிட்டாலோ, அல்லது இஹ்ராமைக் களைந்துவிட்டாலோ, அது ஞாபகம் வந்த உடனேயே தங்களது முடியைக் குறைத்துக்கொள்ளவோ அல்லது மழித்துக்கொள்ளவோ வேண்டும்.
தெரியாமல் அல்லது மறந்து செய்த இத்தவறுக்காக அவர்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோர வேண்டும். மறந்து செய்ததனால் அவர்கள் குற்றவாளிகள் ஆக மாட்டார்கள்; இதற்காக வேறெந்தப் பரிகாரமும் (கஃப்பாராவும்) அவர்களுக்குத் தேவையில்லை. ஞாபகம் வந்ததும் முடியை வெட்டி முடிப்பதோடு அவர்களுடைய உம்ராவின் கடமை முழுமையாக நிறைவடைந்து விடுகிறது.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க