Dr. ஷேக் முபாரக் மதனி

மரணித்த வீட்டில் எத்தனை நாட்களுக்கு சமைக்கக் கூடாது? உறவினர்கள் என்ன செய்ய வேண்டும்?

மரணம் சமையல் உறவினர் சுன்னத்

← முந்தையஅடுதது →
கேள்வி
மரணித்த வீட்டில் எத்தனை நாட்களுக்கு சமைக்கக் கூடாது? உறவினர்கள் என்ன செய்ய வேண்டும்?
பதில்
பதில்:

ஜாஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) மரணித்த செய்தி வந்தபோது, நபி (ஸல்) அவர்கள், "ஜாபருடைய குடும்பத்திற்கு நீங்கள் உணவு ஏற்பாடு செய்யுங்கள், அவர்களுக்குச் சமைப்பது போன்ற காரியங்களில் ஈடுபட முடியாத அளவு மனங்களைத் திசைதிருப்பக்கூடிய கவலை நடந்திருக்கிறது" என்று கூறினார்கள் (அபூதாவூத்).

இதன்படி, மரணித்த வீட்டாருக்கு அன்றைய தினம் (பகல் மற்றும் இரவு) அண்டை வீட்டார் மற்றும் உறவினர்கள் உணவு சமைத்துக் கொடுப்பது வலியுறுத்தப்பட்ட கடமையாகும். ஆனால் பல நாட்களுக்கு அவர்கள் சமைக்கக் கூடாது என்பதோ, அல்லது ஊர் மக்கள் அனைவரும் மையத்து வீட்டில் ஒன்று கூடி சாப்பிடுவதோ மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத பிழையான செயலாகும். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு வேறு வழியின்றி சமைத்துக் கொடுக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே அது குற்றமாகாது.

← முந்தையஅடுதது →