Dr. ஷேக் முபாரக் மதனி

ஒரே இரவில் மனைவியோடு பல தடவைகள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால், ஒவ்வொரு முறைக்கும் தனித்தனியாகக் குளிக்க வேண்டுமா?

தாம்பத்தியம் குளிப்பு ஜனாபத் வுழூ

← முந்தையஅடுதது →
கேள்வி
ஒரே இரவில் மனைவியோடு பல தடவைகள் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால், ஒவ்வொரு முறைக்கும் தனித்தனியாகக் குளிக்க வேண்டுமா?
பதில்
பதில்:

மனைவியோடு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் பெருந்தொடக்கு ஏற்படும், எனவே தொழுகை போன்ற இபாதத்துகளுக்காகக் குளிப்பது கடமையாகும். ஆனால், ஒரே இரவில் இரண்டு அல்லது பல முறை தாம்பத்தியத்தில் ஈடுபட்டால், ஒவ்வொரு முறைக்கும் தனித்தனியாகக் குளிக்க வேண்டிய அவசியமில்லை. இறுதியாக தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ரு தொழுகைக்கு எழுந்திருக்கும்போது ஒருமுறை முழுமையாகக் குளித்துக்கொண்டால் போதுமானது.

இருப்பினும், ஒவ்வொரு தாம்பத்தியத்திற்கும் இடையில் வுழூ செய்துகொள்வது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும். "ஒருவர் தன் மனைவியோடு சேர்ந்துவிட்டு மீண்டும் சேர விரும்பினால், அவையிரண்டுக்கும் இடையில் வுழூ செய்துகொள்ளட்டும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

← முந்தையஅடுதது →