Dr. ஷேக் முபாரக் மதனி

பரீட்சைகளுக்கு செல்லும்போது ஏற்படக்கூடிய டென்ஷன் (பதட்டம்) தவிர்ப்பது எவ்வாறு?

பரீட்சை டென்ஷன் பதட்டம் துஆ

← முந்தையஅடுதது →
கேள்வி
பரீட்சைகளுக்கு செல்லும்போது ஏற்படக்கூடிய டென்ஷன் (பதட்டம்) தவிர்ப்பது எவ்வாறு?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் பரீட்சைகளுக்கு செல்லும்போது ஏற்படக்கூடிய டென்ஷனை பதட்டத்தை தவிர்த்துக் கொள்வது எவ்வாறு என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [14]. அன்புள்ள சகோதர சகோதரிகளே பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் பல நிலைகளிலும் பல்வேறு பரீட்சைகளை சந்திக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்படுகிறது [14]. ஸ்கூல்களிலே காலேஜ்களிலே, பல்கலைக்கழகங்களிலே என்று படிக்கிறபோது பல பரீட்சைகள் நம்மை எதிர்கொள்கின்றன [14]. அதேபோல தொழில்கள் செய்யும்போதும் நம்முடைய தொழிலை உறுதிப்படுத்துவதற்கும் அல்லது ப்ரமோஷன் பெறுவதற்கும் பல பரீட்சைகளை நாம் சந்திக்க வேண்டி வருகிறது [14]. பொதுவாக பரீட்சைகள் என்று வருகிற போது அந்த பரீட்சைகளை சந்திக்க போகிறவர்களிடம் ஒரு பதட்டம் ஏற்படுவது என்பது இயல்பான ஒன்றாக இன்று காணப்படுகிறது [14]. இருந்தாலும் கூட ஒரு முஸ்லிம் என்கிற வகையில் இந்த பரீட்சைகளை பதட்டம் இல்லாமல் சந்திப்பதற்கான சில வழிகாட்டல்களை இஸ்லாம் நமக்கு தருகிறது [14]. அந்த வழிகாட்டல்களை நாம் பின்பற்றினால் அல்லாஹ்வுடைய உதவியால் பதட்டம் இல்லாமல், டென்ஷன் இல்லாமல், பரீட்சைகளுக்கு சென்று பரீட்சை எழுதிவிட்டு வர முடியும் இன்ஷா அல்லாஹ் [15].

அந்த வகையில், முதலாவதாக பரீட்சைக்கு தயாராகுதல் நாம் உதாரணமாக ஓஎல் பரீட்சை அல்லது ஏஎல் பரீட்சை எழுத போகிறோம் என்று சொன்னால் அந்த பரீட்சைக்கு என்று ஒரு பாடத்ததிட்டம் இருக்கும் [15]. சிலபஸ் ஒவ்வொரு சப்ஜெக்ட்டுக்கும் குறிப்பிட்ட பாட வரையறைகள் இருக்கும் அந்த பாடங்களை நாம் ஏற்கனவே சரியான முறையிலே படித்து கிரகித்துக் கொள்ள வேண்டியவற்றை கிரகித்துக் கொள்ள வேண்டும் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை மனப்பாடம் செய்ய வேண்டும் [15]. இந்த இடத்திலே மாணவர்கள் விடக்கூடிய ஒரு பிழை என்னவென்று கேட்டால் எக்ஸாம் காலம் நெருங்கும் வரைக்கும் பாடத்திட்டம் முழுவதையும் பிற்படுத்துவது [15]. இப்ப எக்ஸாம் நெருங்குகிற போது வேக வேகமாக படிக்க முயற்சி செய்வார்கள் [15]. எல்லாவற்றையும் கிரகிக்க முடியாத ஒரு நிலை தோன்றுகிறது [15]. மனப்பாடம் செய்து கொள்ள வேண்டியவற்றை மனப்பாடம் செய்ய முடியாத ஒரு சிக்கல் தோன்றுகிறது [15]. அந்த நேரத்தில் அவர்கள் ஓவர்லோடாக ஃபீல் பண்ணுகிறார்கள் [15]. அவர்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறது [16]. அதேபோல அங்சைட்டி என்கிற பதட்டம் வருகிறது [16]. இந்த நிலை உண்மையிலே நாமாக தேடிக்கொண்ட ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [16]. எனவே பாடத்ததிட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக நாம் அந்தந்த நேரங்களில் படித்து அதை பூரணப்படுத்திக் கொள்வது என்பது பரீட்சைக்கு தயாராகுவதில் மிக முக்கியமான ஒரு விஷயமாகும் [16].

இங்கே நாம் வலியுறுத்த வருகிற விஷயம் பரீட்சைக்கு தயாராகுவதற்காக வேண்டி பாடத்ததிட்டத்தை முடிப்பது சம்பந்தமாக அல்ல [16]. மாறாக பாட திட்டங்களை பூர்த்தி செய்து பரீட்சைக்கு செல்ல இருக்கிற மாணவர்கள் அல்லது பரீட்சாத்திகள் பரீட்சை அன்று இரவு அல்லது பரீட்சைக்கு செல்லும்போது பரீட்சை மண்டபத்திலே டென்ஷன் இல்லாமல் இருக்க வேண்டும் [16]. இதற்கு என்ன வழி என்று கேட்டால் முதலாவதாக அன்று இரவு அவர்களுடைய உடலும் உளமும் அமைதியாக இருக்க வேண்டும் [16]. இப்ப நாளை பரீட்சை என்று சொன்னால் இன்று இரவு அல்ஹம்துலில்லாஹ் நாம் ரிலாக்ஸாக தூங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும் [16]. நேர காலத்தோடு தூங்கி நேர காலத்தோடு எழுந்திருப்பது என்பது [16]. அப்ப பொதுவாக இது தொடர்பான ஆய்வாளர்கள் சொல்லும்போது ஒரு ஏழு எட்டு மணி நேரங்கள் பரீட்சைக்கு முதல் அன்று இரவு மாணவர்கள் தூங்குவதுதான் அவர்களுடைய உடலும் உளமும் ஹெல்த்தியாக அமைதியாக இருப்பதற்குரிய நல்ல வழி என்று சொல்கிறார்கள் இதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும் [17]. இரண்டாவதாக காலையில் நேர காலத்தோடு எழுந்து பஜ்ரு தொழுகையை நிறைவேற்ற வேண்டும் [17]. ஆண்களாக இருந்தால் ஜமாத்தோடு பஜிரு தொழுகையை நிறைவேற்ற வேண்டும் [17]. பெண்களாக இருந்தால் உரிய நேரத்தில் வீட்டில் சுப தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் [17]. இந்த தொழுகையை நிறைவேற்றுவதிலே பெரியோர் ஹைர் இருக்கிறது ஏனென்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் யார் பஜிரு தொழுகையை நிறைவேற்றுகிறாரோ பஹுவம்மத்தில்லா அவர் அல்லாஹ்வுடைய பொறுப்பில் இருக்கிறார் அல்லாஹ் அவரை பொறுப்பேற்றுக் கொள்கிறான் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு அல்லாஹ்வுடைய உதவி அவருக்கு இருக்கிறது என்பது இந்த ஹதீஸினுடைய அர்த்தமாக இருக்கிறது [17].

எனவே இது முதலாவது அம்சம் பரீட்சைகளுக்கு செல்லுகிற மாணவர்கள் எந்த தரத்தில் உள்ளவர்கள் க இருந்தாலும் அவர்கள் பஜிர் தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் [18]. இரண்டாவதாக அவர்கள் தொழுதுவிட்டு அல்லாஹ்விடத்திலே துவா கேட்க வேண்டும் [18]. அல்லது தொழுகையிலே அல்லாஹ்விடத்திலே துவா கேட்க வேண்டும் [18]. மூன்றாவதாக காலையிலே ஓத வேண்டிய அவ்ராதுகள் துஆக்கள் திக்ர்கள் இருக்கின்றன [18]. அவற்றை ஓதிக்கொள்ள வேண்டும் [18]. அவற்றை ஓதுகிற போது உள்ளம் அமைதி அடையும் அல்லாஹ்வுடைய உதவி கிடைக்கும் [18]. ரெடியாகி கொண்டு பரீட்சைக்கு செல்லும்போது தவக்குலோடு செல்ல வேண்டும் [18]. நம்முடைய திறமைகளிலும் ஆற்றல்களிலும் நம்பிக்கை வைக்காமல் அல்லாஹ்வுடைய உதவியின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக அவன் மீது பொறுப்புச் சாட்டியவர்கள் ளாக பரீட்சைக்கு செல்ல வேண்டும் அதாவது நாம் ஏற்கனவே சிலபஸை படித்து முடித்திருக்கிறோம் கிரகிக்க வேண்டியவற்றை கிரகித்திருக்கிறோம் மனப்பாடம் செய்ய வேண்டியவற்றை மனப்பாடம் செய்திருக்கிறோம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து புறப்பட்டு செல்வது சற்று நேர காலத்தோடு செல்கிற போது வழியில் ஏற்படுகிற டென்ஷன்களை தவிர்த்து கொள்ள முடியும் மண்டபத்திற்கு பரீட்சை ஹாலுக்கு சென்ற பிறகு அங்கே நாம் முதலிலே பரீட்சை தாள்கள் வினாத்தாள்கள் கொஸ்டின் பேப்பர்ஸ் கிடைக்கும்போது அவற்றை பிஸ்மி சொல்லி பிஸ்மில்லாஹ் என்று சொல்லி வாங்க வேண்டும் பிஸ்மில்லாஹ் என்று ஆரம்பிக்க வேண்டும் வாசிப்பதற்கு [19]. இந்த பிஸ்மில்லாஹ் என்பது மிக முக்கியமான ஒரு விஷயமாகும் [19]. ஏனென்றால், பிஸ்மில்லாஹ் மிஸ் ஆனால், அதில் குறைபாடு ஏற்படும் என்பதை இஸ்லாம் நமக்கு காட்டித் தருகிறது [19].

எனவே, பிஸ்மில்லாவோடு ஆரம்பிக்க வேண்டும் அந்த நேரத்திலும் அல்லாஹும்மலாசல இல்லாமாலஹ இதாசலா அல்லாஹும்ம லாசல இல்லாமாஜலா யா அல்லாஹ் நீ இலகுவாக்கியதை தவிர வேறு இலகுவான ஒன்றுமே கிடையாது நீ நாடினால் கஷ்டத்தையும் இலகுவாக்கி வைப்பாய் என்கிற அந்த துவா வோடு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக பரீட்சையை எழுத ஆரம்பிக்க வேண்டும் [20]. சப்போஸ் நாம் எழுதிக்கொண்டு போகும்போது நாம் கிரகித்த அல்லது மனப்பாடம் செய்த ஒரு விஷயம் மறந்துவிட்டால் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் வதரக்க இதாநீத் நீ ஒன்றை மறந்துவிட்டால் அல்லாஹ்வை திக்ர் செய்து கொள் என்று அல்லாஹ் சொல்கிறான் [20]. அந்த அடிப்படையில் நாம் அந்த இடத்தில் அஸ்தஃபிருல்லாஹ் லா இயலாஹ இல்லல்லாஹ், சுபஹானல்லாஹ், லாஹவலா வலா குவ்வத்த இல்லாபில்லாஹ் என்ற திக்ருளைகளை நாம் ஓதுகிற போது, நிச்சயமாக மறந்து, மறந்தது நினைவுக்கு வரும் [20]. தேவைப்பட்டால் கண்களை மூடிக்கொண்டு, அதை நினைவுபடுத்துவதற்குரிய முயற்சியோடு, இந்த திக்ர்களை நாம் ஓதுவது [20]. இப்ப நாம் குறிப்பிட்ட நான்கு திக்ர்கள் என்பது மட்டுமல்ல, பொதுவாக ஸலவாத் சொல்லலாம் [20]. ஏனைய திக்ர்களை எல்லாம் நாம் ஓதினால், அல்லாஹ்வுடைய உதவியால் அந்த இடத்தில் ஏற்படுகிற பதட்டம் போய் நிச்சயமாக நாம் மறந்த விஷயம் நினைவுக்கு வரும் என்ற நம்பிக்கையோடு நாம் அதை ஓதிக்கொள்ள வேண்டும் [21]. அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வான் [21]. எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே பரீட்சைகளில் ஒரு முஸ்லிமை பொறுத்தவரையில் அதிலும் நல்ல முறையில் பிரிப்பேர் பண்ணி கொண்டு போகக்கூடிய முஸ்லிமை பொறுத்தவரையில் பதட்டப்பட வேண்டிய அவசியமில்லை [21]. அல்லாஹ்வை திக்ரு செய்வது என்பது அவனுடைய பதட்ட த்தை போக்கும் தவக்குல் என்பது அவனுடைய பதட்டத்தை போக்குகிற மிகப்பெரிய ஒரு வழிகாட்டலாகும் எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா யாரெல்லாம் பரீட்சைகள் எழுதுகிறார்களோ அவர்களுடைய பரீட்சைகளை பதட்டம் இல்லாமல் இலகுவாக எழுத அவர்களுக்கு தவபீக் செய்ய வேண்டும் நல்ல பெருபவர்களை பெறுவதற்கு அல்லாஹ் அவர்களுக்கு தவபீக் செய்ய வேண்டும் என்று பிரார்த்தித்து விடைபெறுகிறேன் தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ [21].

← முந்தையஅடுதது →