Dr. ஷேக் முபாரக் மதனி

நபிகளார் அந்நிய பெண்ணோடு தனிமையில் இருந்தார்களா?

நபி(ஸல்) அந்நியப் பெண் தனிமை மஹ்ரம்

← முந்தையஅடுதது →
கேள்வி
நபிகளார் அந்நிய பெண்ணோடு தனிமையில் இருந்தார்களா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மபாத் [6]. உம்முஹராம் பின்த் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போவார்கள் [6]. அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்களுக்கு உணவு வழங்குவார்கள் தலை சீவி விடுவார்கள் என்பனம் போன்ற செய்திகளை புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களில் நாம் பார்க்கிறோம் [6]. உம்முஹராம் பின்த் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு நெருக்கமாக இருந்தார்கள் என்று ஆதாரபூர்வமாக செய்தி வருகிறது என்றால் அல்லாஹ்வுடைய தூதரை புரிந்து கொண்ட ஒருவர் சாதாரணமாகவே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனக்கு மஹரம் இல்லாத ஒரு பெண்ணோடு இப்படி நடந்திருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்வார் [6]. நிறைய ஆய்வுகள் எல்லாம் இதற்கு தேவையே கிடையாது [6].

அல்லாஹ்வுடைய தூதர் இப்படி ஒரு பெண்ணோடு அவர்களிடம் போனார்கள் அவர்களிடத்தில் தங்கினார்கள் அவர்கள் சமைக்க கொடுக்க சாப்பிட்டார்கள் அந்த பெண்மணிகளுக்கு தலை சீவி விட்டார்கள் என்றால் அல்லாஹ்வுடைய தூதரை புரிந்து கொண்டிருக்க ஒரு மனிதன் முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதும் கிடையாது [7]. ஒரு மனிதன் நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதர் தனக்கு மஹரமான ஒரு பெண்ணோடு தான் இப்படி நடந்திருப்பார்கள் என்பதை இலகுவாக புரிந்து கொள்ளலாம் [7]. இருந்தாலும் கூட இமாம் நவவி ரஹிமுல்லாஹ் என்று சொல்லக்கூடிய அறிஞர் இது பற்றி பேசுகிற போது எல்லா உலமாக்களுமே முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள எல்லா உலமாக்களும் உம்முஹராம் பித் மில்ஹான் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்களுக்கு மஹரமான உறவு காரி என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் [7]. எல்லோரும் ஏகோபித்த நிலையில் கூறுகிறார்கள் என்பதை இமாம் நவவி ரஹ்முல்லாஹ அவர்கள் குறிப்பிடுகிறார்கள் [7]. எனவே இந்த இடத்தில் ஒருவருக்கு அந்நிய பெண்ணோடு அல்லாஹ்வுடைய தூதர் இருந்தார்கள் என்ற ஒரு சிந்தனை வருகிறது என்றால் நிச்சயமாக அது சைத்தானால் ஏற்படுத்தப்படக்கூடிய சிந்தனையாகும் [7].

அவர் அல்லாஹ்விடம் சைத்தானை விட்டும் பாதுகாப்பு தேடிக்கொள்ளட்டும் வல்லாஹுத்தஆலா ஆலம் [8].

← முந்தையஅடுதது →