Dr. ஷேக் முபாரக் மதனி

இறந்த உடலை மருத்துவமனைகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு தானம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?

மரணம் மருத்துவம் உணவு

← முந்தையஅடுதது →
கேள்வி
இறந்த உடலை மருத்துவமனைகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு தானம் செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா?
பதில்
பதில்:

சிலர் தாங்கள் மரணிப்பதற்கு முன்னால் தங்களது உடலை மருத்துவமனைகளுக்கோ அல்லது பல்கலைக்கழகங்களில் பயிலும் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காகவோ தானம் செய்யுமாறு வஸிய்யத் செய்கிறார்கள், அல்லது மரணித்த பின் குடும்பத்தினர் அவ்வாறு தானம் செய்கின்றனர். ஒரு முஸ்லிமின் உடல் மிகவும் கண்ணியமானதும் புனிதமானதும் ஆகும். "மரணித்த ஒருவரின் எலும்பை உடைப்பது, அவர் உயிருடன் இருக்கும்போது அவருடைய எலும்பை உடைப்பதற்குச் சமமானதாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரது உடலைக் குளிப்பாட்டி, கஃபனிட்டு, ஜனாஸா தொழுகை நடத்தி, கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வது சமூகத்தின் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். உடலைத் தானம் செய்யும்போது இந்தக் கடமைகள் அனைத்தும் விடுபட்டுப் போகின்றன. இதன் காரணமாக, இறந்த ஒரு முஸ்லிமின் உடலை முழுமையாகத் தானம் செய்வது மார்க்கத்தில் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும்.

அதேவேளையில், உறுப்புத் தானம் செய்வதைப் பொறுத்தவரையில், மரணித்த ஒருவரின் உறுப்புகளைத் தானம் செய்வதன் மூலம் உயிராபத்தில் இருக்கும் மற்றொரு முஸ்லிமின் உயிரையோ, அல்லது முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுக்காத மாற்று மதத்தவரின் உயிரையோ காப்பாற்ற முடியும் என்ற நிர்ப்பந்தமான சூழ்நிலை இருந்தால், அவ்வாறு உறுப்புகளை மட்டும் தானம் செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்று இஸ்லாமிய அறிஞர்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →