Dr. ஷேக் முபாரக் மதனி

மனிதர்கள் அல்லது மிருகங்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா?

தொழுகை ஆடை உருவப்படங்கள் உணவு

← முந்தையஅடுதது →
கேள்வி
மனிதர்கள் அல்லது மிருகங்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா?
பதில்
பதில்:

உயிருள்ள படைப்புகளான மனிதர்கள் அல்லது மிருகங்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடைகளை அணிவதோ அல்லது அவற்றை வீடுகளில் தொங்கவிடுவதோ மார்க்கத்தில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்ட ஒன்றாகும். "நாயும், உருவப்படங்களும் உள்ள வீடுகளுக்கு ரஹ்மத்தின் மலக்குகள் (வானவர்கள்) நுழைய மாட்டார்கள்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். எனவே, இவ்வாறான ஆடைகளை அணிவதையோ, அல்லது சிறு குழந்தைகளுக்கு அவற்றை வாங்கிக் கொடுப்பதையோ ஒரு முஸ்லிம் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், ஒருவர் அவ்வாறு உருவப்படங்கள் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்த நிலையில் தொழுதால் அவருடைய தொழுகை நிறைவேறுமா என்பதைப் பொறுத்தவரையில், தொழுகையைப் பாழாக்கக்கூடிய காரியங்களின் பட்டியலில் இது இடம்பெறவில்லை. எனவே, உருவப்படங்கள் உள்ள ஆடையுடன் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும்; அந்தத் தொழுகை சேரும் என்பதுதான் இஸ்லாமிய அறிஞர்களின் மார்க்கத் தீர்ப்பாகும். இருப்பினும், அந்த ஆடையை அணிந்தது தவறான செயலாகும் என்பதையும், அத்தகைய ஆடைகளைத் தவிர்ப்பது கட்டாயமாகும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

← முந்தையஅடுதது →