Dr. ஷேக் முபாரக் மதனி

அந்நிய ஆண்கள் அந்நியப் பெண்களுக்கும், அந்நியப் பெண்கள் அந்நிய ஆண்களுக்கும் ஸலாம் சொல்லலாமா?

ஸலாம் அந்நிய ஆண் அந்நிய பெண் பித்னா

← முந்தையஅடுதது →
கேள்வி
அந்நிய ஆண்கள் அந்நியப் பெண்களுக்கும், அந்நியப் பெண்கள் அந்நிய ஆண்களுக்கும் ஸலாம் சொல்லலாமா?
பதில்
பதில்:

ஸலாம் சொல்வதும் அதற்குப் பதில் கூறுவதும் இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட இபாதத்துகளாகும். "நீங்கள் ஈமான் கொள்ளும் வரை சுவர்க்கம் செல்ல மாட்டீர்கள்; நீங்கள் ஒருவரையொருவர் நேசிக்கும் வரை முழுமையான ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் ஸலாமைப் பரப்புங்கள், அது உங்களுக்கிடையில் நேசத்தை வளர்க்கும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய ஆறு கடமைகளுள் ஸலாமுக்குப் பதில் சொல்வதும் ஒன்றாகும்.

ஆண்கள் தங்களுக்குள்ளும், மஹ்ரமான பெண்களுக்கும் ஸலாம் சொல்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அதேபோன்று வயது முதிர்ந்த அந்நியப் பெண்களுக்கு ஸலாம் சொல்வதிலும் எந்தத் தடையுமில்லை; அவர்களும் தாராளமாகப் பதில் கூறலாம். ஆனால், வாலிபப் பருவத்தில் உள்ள பெண்களுக்கு ஓர் அந்நிய ஆண் ஸலாம் சொல்வதனால் குழப்பம் (பித்னா) ஏற்படுமாக இருந்தால், அல்லது அவர்கள் அந்த ஸலாமை வைத்து தங்களுக்குள் தவறான உறவை வளர்த்துக்கொள்ளக்கூடிய சூழல் ஏற்படுமாக இருந்தால், அத்தகைய சந்தர்ப்பங்களில் ஸலாம் சொல்வதைத் தவிர்த்துக்கொள்வதே சிறந்தது என இஸ்லாமிய அறிஞர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.

பித்னா ஏற்படாது என்ற உறுதியான நிலை காணப்பட்டால் ஸலாம் சொல்வதில் குற்றமில்லை. உதாரணமாக, பல பெண்கள் ஒன்றாகச் செல்லும் போது ஓர் ஆண் அவர்களுக்கு ஸலாம் சொல்வது பித்னாவிலிருந்து பாதுகாப்பான சூழலாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவ்வாறு பெண்கள் கூட்டமாகச் சென்றபோது ஸலாம் கூறியுள்ளார்கள். மேலும், தொலைபேசியில் பேசும்போது ஸலாம் சொல்லிக்கொள்வது வலியுறுத்தப்பட்ட அம்சமாகும்; அதில் அந்நிய ஆண், பெண் என்ற வேறுபாடின்றி யார் ஸலாம் கூறினாலும் பதில் அளிக்க வேண்டும்.

← முந்தையஅடுதது →