Dr. ஷேக் முபாரக் மதனி

சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட மிருகங்களினுடைய சிறுநீர் நஜீஸ் (அசுத்தம்) ஆகுமா?

தூய்மை உணவு

← முந்தையஅடுதது →
கேள்வி
சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட மிருகங்களினுடைய சிறுநீர் நஜீஸ் (அசுத்தம்) ஆகுமா?
பதில்
பதில்:

இஸ்லாத்தில் மாமிசம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட ஒட்டகம், ஆடு, மாடு, முயல் போன்ற மிருகங்களின் சிறுநீர் மற்றும் மலம் நஜீஸ் (அசுத்தம்) கிடையாது என்பதே சரியான கருத்தாகும். இதற்கு ஹதீஸ்களில் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆடுகள் கட்டப்படக்கூடிய இடங்களில் தொழுவது பற்றிக் கேட்கப்பட்டபோது, அந்த இடங்களில் தொழுவதற்கு அவர்கள் அனுமதியும் ஆர்வமும் அளித்துள்ளார்கள்; அந்த இடங்கள் பரக்கத்தானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆடுகள் கட்டப்படும் இடங்களில் நிச்சயமாக அவை சிறுநீர் மற்றும் மலம் கழித்திருக்கும். அந்த எச்சங்கள் நஜீஸாக இருந்திருந்தால் நபிகளார் அங்கு தொழ அனுமதித்திருக்க மாட்டார்கள்.

அதேபோல, மதீனாவிற்கு வந்த சில நோயாளிகளுக்கு ஒட்டகத்தின் சிறுநீரை அருந்துமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தியும் உள்ளது. மேலும், இந்த மிருகங்களின் கழிவுகள் நஜீஸ் என்பதைச் சொல்லக்கூடிய எந்தத் தெளிவான ஆதாரங்களும் ஹதீஸ்களில் கிடையாது. எனவே, உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் மற்றும் பறவைகளின் எச்சங்களும் சிறுநீரும் நஜீஸ் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →