Dr. ஷேக் முபாரக் மதனி

சுன்னத்தான தொழுகைகளின் போது ருகூவிலிருந்து எழுந்த பின் இரண்டு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை புரியலாமா?

தொழுகை துஆ ஹதீஸ்

← முந்தையஅடுதது →
கேள்வி
சுன்னத்தான தொழுகைகளின் போது ருகூவிலிருந்து எழுந்த பின் இரண்டு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை புரியலாமா?
பதில்
பதில்:

ரசூல் (ஸல்) அவர்கள் ஃபர்ழான தொழுகைகளாக இருந்தாலும் சரி, சுன்னத்தான தொழுகைகளாக இருந்தாலும் சரி ருகூவிலிருந்து நிலைக்கு வந்த பிறகு ''ரப்பனா வலகல் ஹம்து'' போன்ற திக்ருகளையே ஓதியிருக்கிறார்கள். இந்த நிலையில் கைகளை ஏந்தியோ, கைகளை ஏண்ணாமலோ துஆ செய்ததாக எவ்வித ஆதாரங்களும் கிடையாது.

வித்ருத் தொழுகையின் இறுதியில் ருகூவிலிருந்து நிலைக்கு வந்த பிறகு குனூத் ஓதுவது குறித்து கருத்து வேறுபாடு காணப்படுகிறது. ரசூல் (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகையில் குனூத் ஓதியதாக எந்த ஹதீஸ்களும் நேரடியாகக் கிடையாது. இப்னு அப்பாஸ் (ரலி) அல்லது அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக வரும் செய்தியில் இடம்பெறும் "வித்ரில் ஓதுவதற்கு" என்ற வாசகம் பலவீனமானது (ஷாதானது) என இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே, ''அல்லாஹும்மஹ்தினீ'' என்ற பொதுவான துஆவைக் கற்றுக் கொடுத்தார்களே தவிர வித்ரில் அல்ல என்பது அவர்களுடைய நிலைப்பாடு.

எனவே, ருகூவுக்குப் பிறகு எந்தச் சந்தர்ப்பத்திலும் கையேந்தி துஆ செய்வது மார்க்கத்தில் கிடையாது; துஆ செய்யக்கூடிய இடம் ருகூவுக்குப் பிறகு உள்ள நிலை கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →