கேள்வி
இறந்த ஒருவருக்காக 3, 7, 20, 40 என்று நாட்கள் குறிக்கப்பட்டு கத்தம் ஓதுவது மார்க்கத்தில் கூடுமா?
பதில்
பதில்:
ஒருவர் மரணித்து விட்டால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிடும். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிகளான பிள்ளைகளின் துஆ, இஸ்திஃபார், ஹஜ், சதக்கா போன்ற நன்மைகள் மட்டுமே மரணித்தவரைச் சேரும். ஆனால், குர்ஆன் ஓதி அதன் நன்மையைச் சேர்ப்பிப்பது தொடர்பாக தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடையாது.
உண்மையிலேயே இது நன்மை சேர்க்கக்கூடிய ஒரு வழியாக இருந்திருந்தால் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அதை செய்திருப்பார்கள். எனவே குர்ஆன் ஓதி ஹதியா செய்வது மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும். மேலும், 3, 7, 20, 40 என நாட்களைக் குறிப்பதும், கூட்டமாக இருந்து குர்ஆன் ஓதுவதும் மார்க்கம் அனுமதிக்காத முற்றிலும் தவறான பித்அத் (நூதன அனுஷ்டானம்) ஆகும். ஆகவே அனுமதிக்கப்பட்ட சதக்கா, துஆ போன்றவற்றைச் செய்வதே சிறந்ததாகும்.
வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க