Dr. ஷேக் முபாரக் மதனி

தொழுகையில் இருக்கும்போது அடிக்கடி காற்று பிரிபவர் என்ன செய்ய வேண்டும்?

தொழுகை தூய்மை

← முந்தையஅடுதது →
கேள்வி
தொழுகையில் இருக்கும்போது அடிக்கடி காற்று பிரிபவர் என்ன செய்ய வேண்டும்?
பதில்
பதில்:

காற்று பிரிவது என்பது வுழுவை முறிக்கக்கூடிய காரியங்களில் ஒன்றாகும். ஒருவர் வுழு செய்துவிட்டு இருக்கும்போதோ அல்லது தொழுது கொண்டிருக்கும்போதோ காற்று பிரிந்துவிட்டால் அவருடைய வுழு முறிந்துவிடும்; அதோடு தொழுகையும் முறிந்துவிடும். எனவே, அவர் உடனடியாக வெளியே வந்து மீண்டும் வுழுச் செய்துவிட்டுப் புதிதாகத் தொழுகையில் இணைந்து கொள்ள வேண்டும்.

ஆனால், உடல்நலக் குறைவினால் அடிக்கடி காற்று பிரியக்கூடிய பிரச்சினை உள்ளவர்களைப் பொறுத்தவரையில், இஸ்லாம் அவர்களுக்குச் சில சலுகைகளை வழங்கியுள்ளது. மார்க்கத்தில் எவ்விதச் சங்கடங்களும் இல்லை; ஒருவருடைய சக்திக்கு மீறி அல்லாஹ் எதையும் கஷ்டப்படுத்துவதில்லை என்ற குர்ஆன் வசனங்களின் அடிப்படையில், இவ்வாறான நோயாளிகள் இகாமத் சொல்வதற்கு சற்று முன்னதாக (தொழுகைக்காக) வுழுச் செய்துவிட்டு ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு தொழுது கொண்டிருக்கும்போது இடையில் காற்றுப் பிரிந்தாலும், அவர்கள் தொழுகையை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை. அதற்காகத் தொழுகை முறியாது; அவர்கள் தொடர்ந்து தொழுகையை நிறைவேற்றலாம். எனினும், ஒவ்வொரு புதிய தொழுகைக்கும் (வக்துக்கும்) அவர்கள் புதிதாக வுழுச் செய்து கொள்வது அவசியமாகும்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →