வுழூ செய்யும்போது அல்குர்ஆனும் சுன்னாவும் அடையாளப்படுத்திய உறுப்புகளை முழுமையாகக் கழுவ வேண்டும். ஒரு சிறு பகுதி கூடக் கழுவப்படாமல் விடப்படக் கூடாது. ஒருமுறை சஹாபாக்கள் வுழூ செய்யும்போது சிலரது பாதங்களின் பிற்பகுதி முழுமையாகக் கழுவப்படாமல் இருப்பதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், "நரக நெருப்பினால் குதிங்கால்களுக்குக் கேடுதான்" என்று கடுமையாக எச்சரித்தார்கள்.
எனவே, வுழூ செய்யும் உறுப்புகளில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் விதமாக ஏதேனும் தடைகள் (Barrier) இருந்தால் வுழூ நிறைவேறாது. உதாரணமாக, தார், ரப்பர் பெயிண்ட் அல்லது வாட்டர்ப்ரூஃப் பெயிண்ட் (Waterproof paint) போன்றவை தோலில் இருந்தால் அவை தண்ணீர் படுவதைத் தடுத்துவிடும்; எனவே அவற்றை முழுமையாக அகற்றிய பின்னரே வுழூ செய்ய வேண்டும்.
ஆனால், சாதாரண பேனா மை (Ink) அல்லது வாட்டர் பெயிண்ட் போன்றவை உடலில் பட்டிருந்தால், அவை தண்ணீர் தோலைச் சென்றடைவதைத் தடுக்காது. எனவே இவ்வாறான பொருட்கள் உடலில் படிந்திருக்கும் நிலையில் வுழூ செய்தால் வுழூ முழுமையாக நிறைவேறும.
'); ############################ ('பொய்க் கனவுக்கு இவ்வளவு தண்டனையா _ __ Dr. ML Mubarack Madani_ M.Sc. In Clinical Counselling_ (M4A_1.m4a', 'கனவு, பொய், மறுமை, தண்டனை, ஹராம்