ஆண்களுக்கு கத்னா செய்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத் (சிலர் வாஜிப் என்றும் கூறுவர்) என்பதிலும், அது சமுதாயத்தில் நூறு வீதம் நடைமுறையில் இருப்பதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் பெண் குழந்தைகளுக்கு கத்னா செய்ய வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு காணப்படுகிறது. பெரும்பாலான நாடுகளிலும் இது நடைமுறையில் இல்லை.
மார்க்க ரீதியில் பெண் குழந்தைகளுக்கும் கத்னா செய்வது உள்ளதா என்றால், பெரும்பாலான உலமாக்களின் நிலைப்பாடு பெண் குழந்தைகளுக்கும் கத்னா செய்வது மார்க்கத்தில் உள்ளது என்பதுதான். இதற்குப் பிரதான ஆதாரமாக, நபி (ஸல்) அவர்கள் ஐந்து இயற்கையான சுன்னாக்களில் ஒன்றாக "அல்ஹித்தான்" (கத்னா செய்வது) என்பதைப் பொதுப்படையாகக் குறிப்பிட்டதைக் காட்டுகின்றனர். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.
இரண்டாவதாக, "கத்னா செய்யப்பட்ட இரண்டு உறுப்புகள் சந்தித்தால் குளிப்பு கடமையாகிவிடும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்கள் பெண்களுக்கு கத்னா செய்யும் நடைமுறை இருந்ததற்கான ஆதாரமாக முன்வைக்கிறார்கள். மூன்றாவதாக, மதீனாவில் பெண்களுக்கு கத்னா செய்யும் ஒரு பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள், "கத்னா செய்யும்போது ஆழமாக வெட்டி விடாதே" என்று கூறிய ஹதீஸை ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் ஸஹீஹானது என்று குறிப்பிடுகிறார்கள்.
எனவே, பெண்களுக்கு கத்னா செய்வது மார்க்கத்தில் உள்ள ஒன்றாகும். ஆனால் இது ஆண்களைப் போன்று வலியுறுத்தப்பட்ட ஒன்றல்ல; மாறாக இது பெண்களுக்குரிய சுன்னாவாக அல்லது ஒரு சிறப்பான அம்சமாக அமையும். சரியான முறையில் கத்னா செய்யக்கூடிய மருத்துவர்கள் அல்லது தேர்ச்சி பெற்றவர்கள் இருந்தால் பெண் குழந்தைகளுக்கும் செய்து கொள்ளலாம். தவறாகச் செய்வதால் பாதிப்புகள் ஏற்படும் சூழல் இருந்தால் அதனைத் தவிர்த்துக் கொள்ளலாம்.