Dr. ஷேக் முபாரக் மதனி

மரணித்த நல்லடியார்களுடைய உடலை மண் சாப்பிடாதா?

மரணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
மரணித்த நல்லடியார்களுடைய உடலை மண் சாப்பிடாதா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் மரணித்த நல்லடியார்களுடைய உடலை மண் சாப்பிடாதா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [12]. அன்புள்ள சகோதர சகோதரிகளே பொதுவாக மக்கள் மத்தியில் ல நல்லடியார்களுடைய உடலை மண் சாப்பிட மாட்டாது அது அடக்கம் செய்யப்பட்டபடி அப்படி இருக்கும் என்கிற நம்பிக்கை சிலரிடம் காணப்படுகிறது [12]. இது தொடர்பாக நாம் பார்க்கிற போது அல்குர்ஆனிலே இது தொடர்பாக எதுவுமே சொல்லப்படவில்லை [12]. ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள் எப்லா னல் இன்சான் இல்லா அஜப தனபரக்கல் மனிதனுடைய அனைத்துமே இத்து போய்விடும் அதாவது ஒரு மனிதனை அடக்கம் செய்தால் அவனுடைய உடல் உறுப்புக்கள் அனைத்துமே இத்து போய்விடும் அஜுப்பு தனபை தவிர என்று சொன்னார்கள் அஜுபுதனப் என்பது முள்ளான் தண்டை குறிக்கும் முதுகில்லிருந்து வரக்கூடிய எலும்பின் கடைசியில் இருக்கிற அந்த பகுதியைதான் அஜ்புத் தனப் என்று சொல்வது [12]. அந்த பகுதியை தவிர மற்ற எல்லாமே இத்து போய்விடும் [12]. அதை வைத்துதான் மீண்டும் அவனுடைய படைப்பு உருவாக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [13].

இந்த ஹதீஸ் சஹீஹுல் புகாரியில் 4814வது இலக்கத்திலும் சஹீஹ் முஸ்லிமிலே 2955வது இலக்கத்திலும் பதிவு செய்யப்பட்டிருக்கிற ஆதாரபூர்வமான ஒரு ஹதீஸாகும் [13]. இங்கே எபலா குள்ுஷை மினல் இன்சான் மனிதனுடைய என்று வருகிறது அல் இன்சான் என்பது பொதுவாக எல்லா மனிதர்களையும் குறிக்கும் முஸ்லிம்களையும் குறிக்கும் முஸ்லிம் அல்லாதவர்களையும் குறிக்கும் நல்லடியார்களையும் குறிக்கும் பாவிகளையும் குறிக்கும் எல்லோரையும் குறிக்கக்கூடிய வார்த்தைதான் அல் இன்சான் என்பது [13]. எனவே இந்த புகாரி முஸ்லிமிலே பதிவு செய்யப்பட்டிருக்கிற இந்த ஹதீஸின் அடிப்படையில் எல்லா மனிதர்களும் மரணித்த பிறகு அவர்களுடைய உடல், மண்ணறையில் வைக்கப்பட்டால், கால ஓட்டத்தில், அது இறந்துவிடும் [13]. அதாவது இத்து போய்விடும் என்பதை, நாம் இந்த ஹதீஸின் மூலம் புரிந்து கொள்ளலாம் [13].

அதே நேரத்திலே, இன்னும் ஒரு ஹதீஸ் வருகிறது [13]. சுன்னன் அபூதாவூதிலே பதிவு செய்யப்பட்டிருக்கிற ஹதீஸ், சுனன் அபூதாவூதில் 1047வது இலக்கத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கிற ஒரு ஹதீஸ் [13]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் இன்னல்லாஹ அலல் அஜிஸாதல் அம்பியா நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பூமிக்கு நபிமார்களுடைய உடம்பை ஹராமாக்கி இருக்கிறான் [14]. இந்த ஹதீஸின் அடிப்படையில் நபிமாருடைய உடம்பை மண் தின்னாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [14]. இப்ப முதல் ஹதீஸ் எல்லா மனிதர்களுடைய உடலுமே இத்து போகும் என்று சொல்கிறது [14]. இரண்டாவது ஹதீஸ் நபிமார்களுடைய உடலை மண் தின்னாது என்று வருகிறது [14]. இதை இரண்டையும் இணக்கம் காணும்போது முதலாவது ஹதீஸ் ஆம்மான ஹதீஸாகும் [14]. பொதுவான சட்டத்தை சொல்லக்கூடிய ஹதீஸாகவும் இரண்டாவது ஹதீஸ் அந்த பொதுச்சட்டத்தில்ிருந்து நபிமார் விதிவிலக்கு பெறுகிறார்கள் என்பதை சொல்லுவதாக காணப்படுகிறது [14]. எனவே மனிதர்களில் நபிமார்களுடைய உடலை மண் தின்னாது மற்ற எல்லா மனிதர்களுடைய உடலையும் மண் தின்றுவிடும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் [14].

இருந்தாலும் கூட சில அறிஞர்கள் யுத்தங்களிலே கொலை செய்யப்படக்கூடிய ஷஹீதுகளுடைய உடலை மண் தின்னாது என்கிற கருத்தை சில சம்பவங்களை ஆதாரமாக வைத்து முன் வைக்கிறார்கள் ஆனால் அது சம்பவங்கள் தான் ஏனென்றால் ஒரு உடல் மண்ணில் வைக்கப்பட்ட பிறகு அந்த மண்ணுடைய தன்மை உடலினுடைய தன்மைக்கு ஏற்ப சில உடல்கள் வேகமாகித்து போகும் சில உடல்கள் தாமதமாகித்து போகும் [15]. சில நேரங்களில் அல்லாஹுத்தஆலாவுடைய நாட்டம் நீண்ட காலங்களுக்கு சில உடல் இருக்கலாம் [15]. எனவே பொதுவாக நல்லடியார்களுடைய உடல்களை மண் தின்னாது என்று எடுத்துவிட்டு யாராவது ஒருவரை தோண்டுகிற போது அவருடைய உடல் கிடைக்காத நேரத்தில் அவர் நல்லடியார் அல்ல என்கிற ஒரு குழப்பத்திற்கு நாம் வரவேண்டி வரும் [15]. எனவே குர்ஆனிலோ ஹதீஸிலோ நல்லடியார்களுடைய உடல் பாதுகாக்கப்படும் மண் தின்னாது என்பதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது [15]. எல்லோருடைய உடலும் இத்துப்போகும் [15]. நபிமார்களுடைய உடல் மாத்திரம் பாதுகாக்கப்படும் என்பதை ஹதீஸ்களின் ஒளியில் நாம் புரிந்து கொள்ள முடிகிறது வல்லாஹுத்தஆலா ஆலம் [15].

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →