Dr. ஷேக் முபாரக் மதனி

நாம் நபிமார்களை குறிப்பாக முஹம்மது நபி (ஸல்) அவர்களை கனவிலே காண முடியுமா?

அகீதா

← முந்தையஅடுதது →
கேள்வி
நாம் நபிமார்களை குறிப்பாக முஹம்மது நபி (ஸல்) அவர்களை கனவிலே காண முடியுமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்துலாம் ரசூலில்லாம் பொதுவாக மனித வாழ்க்கையில் தூக்கத்தில் கனவுகள் வருவது என்பது இயற்கையான ஒரு அம்சமாகும் [1]. சில நேரங்களில் கனவுகள் ஆழ்மன பதிவுகளாகவும் வெளிப்பட வாய்ப்பிருக்கிறது [1]. ஆனால் பொதுவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவுகள் பற்றி பேசும்போது நல்ல கனவு கெட்ட கனவு என்று கனவை இரண்டாக வகைப்படுத்தி நமக்கு சொல்கிறார்கள் [1]. நல்ல கனவு என்பது அல்லாஹ்விடமிருந்து வரக்கூடியது வஹியின் 60 அல்லது 70 பங்குகளில் ஒரு பங்கு என்று குறிப்பட்டிருக்கிறார்கள் [1]. நல்ல கனவுகள் காணும்போது அந்த நல்ல கனவுகளை மக்களுக்கு சொல்லலாம் என்பதையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதித்திருக்கிறார்கள் [1]. கெட்ட கனவுகளை பொறுத்தவரையில் சைத்தானிடமிருந்து வரக்கூடியது என்றும் அந்த கெட்ட கனவுகளை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நமக்கு வழிகாட்டியிருக்கிறார்கள் [1].

இப்ப கனவு காணுகிற ஒருவர், நல்ல கனவாக இருந்தால், அவருக்கு வரக்கூடிய ஒரு நன்மாராயமாக அதை எடுத்துக்கொண்டால் போதுமானதாகும் [2]. பொதுவாக, கனவுக்கு பலன் சொல்லுவது என்பது அதாவது கனவை கண்டவர் நான் இவ்வாறு கனவு கண்டேன் என்று சொல்லும்போது, அதற்கு விளக்கம் சொல்லுவது என்பது ஆரம்ப காலத்திலிருந்து நடைமுறையில் வரக்கூடிய ஒரு விஷயமாகும் [2]. ஆனால் அந்த விளக்கம் என்பது 100 வீதம் உண்மையானது என்பது அர்த்தம் கிடையாது [2]. சில சலபுகள் கனவுக்கு விளக்கம் சொல்லி குறிப்பாக இமாம் இப்னுசீரின் ரஹிமுல்லாஹ அவர்கள் கனவுக்கு விளக்கம் சொல்லுவார்கள் என்று அவர்களுடைய விளக்கங்கள் அடங்கிய ஒரு நூலும் வந்திருக்கிறது ஆனால் அது இமாம் இப்னுசீரின் சொன்னதுதானா என்கிற ஒரு சர்ச்சையும் காணப்படுகிறது [2]. எனவே நாம் நல்ல கனவு கண்டுவிட்டால் நம்முடைய மன அதிலே நாம் முடிவெடுத்து கொள்ளலாம் ஏதோ ஒரு நல்ல செய்தி அல்லாஹுத்தஆலா எனக்கு சொல்கிறான் என்று இதற்கு மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு நாம் தடுமாற வேண்டிய அவசியம் கிடையாது [2].

கெட்ட கனவு வந்துவிட்டால் இது சைத்தானிடமிருந்து நமக்கு வரக்கூடிய ஒன்று அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்பு தேடி கொண்டால் போதுமானது என்ற முடிவுக்கு வர வேண்டும் [3]. கெட்ட கனவு காணக்கூடிய பல சகோதர சகோதரிகள் என்ன செய்வார்கள் என்றால் அது பற்றிய விளக்கத்தை கேட்க முயற்சி செய்வார்கள் [3]. அதை சில சமூகத்தில் இருக்கக்கூடிய ஏமாற்று பேர்வழிகள் அவர்களுக்கு பிழையான விளக்கங்களை சொல்லி அவர்களுடைய மனங்களில் பயங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களை மனநோயாளிகளாக மாற்றுவது அல்லது அதன் மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ள முயற்சி செய்வது என்ற காரியங்களில் இறங்குவதை பார்க்கிறோம் எனவே சுருக்கமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நல்ல கனவு ஒன்று காணுகிறோம் என்றால் அல்லாஹ்வை புகழ்ந்து கொள்ளுங்கள் ஒரு நன்மாராயம் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது அதனுடைய அர்த்தம் என்ன என்பதை அல்லாஹ் அறிவான நான் ஒரு நல் ஆராயம் கெட்ட கனவாக இருந்தால் அது சைத்தானிடமிருந்து வரக்கூடியது [3]. அந்த கெட்ட கனவு காணக்கூடியவர் அல்லாஹ்விடம் சைத்தானுடைய தீங்குகளில்ிருந்து பாதுகாப்பு தேடி கொண்டால் போதுமானது [3]. அந்த கனவை யாரிடமும் சொல்ல வேண்டாம் அலட்டவும் தேவையில்லை [3].

இது மிக முக்கியமான அம்சமாகும் [4]. நான் இவ்வாறு ஒரு கனவு கண்டுவிட்டேன் என்று சில சகோதர சகோதரிகள் அலட்டிக் கொள்வதை பார்க்கிறோம் [4]. அலட்ட வேண்டிய எந்த தேவையும் கிடையாது [4]. அதனால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை [4]. அடுத்ததாக கனவிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருவது [4]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவு காண முடியுமா என்று கேட்டால் ஹதீஸ்களை நாம் பார்க்கிற போது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண முடியும் என்பதுதான் சரியான கருத்தாக காணப்படுகிறது [4]. பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்திருக்கிறார்கள் [4]. சஹாபாக்களும் கூட அவர்களிடத்திலே சில தாபியீன்கள் ரசூல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்களை நேரடியாக பார்க்கா தாபியீன்கள் வந்து நான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்களை கனவில் கண்டேன் என்று சொன்னபோது அந்த சஹாபாக்கள் அவர்களை பற்றி ரசூல்லாஹ அவர்கள் எந்த வடிவத்தில் நீ கண்டாய் என்று கேட்டு வடிவத்தை சொன்னபோது நீ கண்டது அல்லாஹ்வுடைய தூதர்தான் என்று சொன்னதை பார்க்கிறோம் [4].

இப்ப சஹாபாக்களே சொல்லுகிறார்கள் பார்க்காத ஒருவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயிரோடு நேரடியாக பார்க்காத ஒருவர் அல்லாஹ்வுடைய தூதரை கனவில் காணலாம் என்கிற நிலைப்பாட்டில் சஹாபாக்களும் இருந்திருக்கிறார்கள் [5]. தாபியீன்களும் இருந்திருக்கிறார்கள் [5]. அதற்கு பின்னால் வந்த உலமாக்கள், முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கிறோம் [5]. ரசூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் பார்த்தால், அவர்களுடைய சரியான தோற்றத்தில் தான் பார்த்தோமா என்பதை நம்ம உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் [5]. ஏனென்றால் ரசூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள் என்னை யார் கனவில் பார்த்தாரோ, அவர் என்னை பார்த்தார் [5]. ஏனென்றால் சைத்தான் என்னுடைய வடிவத்தில் வரமாட்டான் என்று [5]. ரசூலுல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வடிவத்தில் அவங்களுடைய ஷயில்கள் சொல்லப்பட்டிருக்கின்றன [5]. அவர்களுடைய அங்க அடையாளங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன [5]. அந்த அடிப்படையில் ஒருவர் பார்த்தால் அவர் பார்த்தது ரசூலுல்லாஹ்தான் [5]. ஆனால் சில நேரங்களில் சைத்தான் வேறொரு ரூபத்தை நமக்கு ஏற்படுத்தி, அதிலே வந்து ரசூலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்டது போல காட்டலாம் [5]. ஆனால் அது ரசூலுல்லாஹ்வாக இருக்காது என்பதையும் நம்ம புரிந்து கொள்ள வேண்டும் [6].

இப்ப ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பது என்பது மூமின்களுக்கு மட்டும் உரிய ஒரு சிறப்பம்சம் கிடையாது [6]. முஸ்லிம் அல்லாதவர்களும் ரசூலுல்லாஹ்வை கனவில் காண முடியும் [6]. ரசூல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த ஒரு காபிர் ரசூலுல்லாஹ்வை கனவில் கண்டிருக்கலாம் [6]. அதே போன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அங்க அடையாளங்களை படித்த ஒருவர் ரசூலல்லாஹ்வை கனவில் காணலாம் [6]. எதற்காக இதை சொல்லுகிறோம் என்று கேட்டால் மூமின்கள் மட்டும்தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காண்பார்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லவில்லை [6]. பொதுவாக யாரும் காணலாம் [6]. ஆனால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டால் அவருக்கு இன்னென்ன பாக்கியங்கள் இருக்கின்றன என்று எந்த ஹதீஸும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [6].

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் வந்தார்கள் இப்படி இப்படி எல்லாம் எனக்கு சொன்னார்கள் என்று சொல்லி மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை எல்லாம் மக்கள் மத்தியிலே புகுத்த நினைப்பது மிகப்பெரிய வழிகட்டிய ஒரு வழிகேடாக இருந்து கொண்டிருக்கிறது [7]. ரசூல்லாஹு அலைஹி வஸல்லம் கனவில் வந்தாலும் அவர்கள் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை நமக்கு சொல்லித் தர போவது இல்லை சொன்னாலும் கூட அது மார்க்கமாக ஆகப்போவது இல்லை ஏனென்றால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உயிரோடு இருந்தாலும் என்னை பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை என்று ரசூலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வபாத்தோடு மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டுவிட்டது [7]. இந்த மார்க்கத்தில் புதுமைகளை உண்டாக்கினால் அது வழிகேடு என்றும் அவர்கள் சொல்லிவிட்டார்கள் [7]. எனவே ரசூலுல்லாஹ் கனவில் வந்தார்கள் எனக்கு அப்படி சொன்னார்கள் இப்படி சொன்னார்கள் என்று மக்களை ஏமாற்ற நினைப்பது மிக மோசமான ஒரு வழிகேடாக இருந்து கொண்டிருக்கிறது [7]. எனவே பொதுவாக கனவை பற்றி இந்த குறிப்பை நம்ம புரிந்து கொண்டால் கனவை வைத்து நம்ம அலட்டிக்கொள்ள குழம்பி கொள்ளவோ தேவையில்லை என்பதை புரிந்து கொள்ளலாம் வல்லாஹுத்தஆலா ஆலம் [8].

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →