அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத ஒருவர் தொழுகையில் இருக்கிற போது தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லலாமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [1]. ஒருவர் தொழுகையிலே இருக்கிற போது அன்புள்ள சகோதர சகோதரி ரிகளே பொதுவான பேச்சுக்கள் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதை ஹதீஸ்களில்ிருந்து நாம் அறிந்து கொள்ளலாம் [1]. தும்மிய போது அல்ஹம்துலில்லாஹ் அவர் சொல்லலாமா என்பதை பொறுத்தவரையில் இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியிலே கூடும் கூடாது என்கிற பல கருத்துக்கள் காணப்படுகின்றன [1]. இருந்தாலும் கூட ஹதீஸ்களை நாம் பார்க்கிற போது ஒருவர் தொழுகையிலே இருக்கிற போது அவருக்கு தும்மல் வந்தால் அவர் மற்றவர்களுக்கு தொல்லை இல்லாத அடிப்படையில் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது மார்க்கத்திலே அனுமதிக்கப்பட்டதாகவும் சுன்னாவாகவும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [1].
இந்த சொல்லுகிற போது சத்தமிட்டு சொல்வதா அல்லது அவர் மனதுக்குள் சொல்லிக் கொள்வதா என்பதை பொறுத்தவரையிலும் உலமாக்கள் மத்தியிலே கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு நாள் ஒரு நபித்தோழர் தொழுகையிலே தும்மிவிட்டு அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்கிறார் [2]. அப்படி அவர் அல்ஹம்துலில்லாஹ் சொல்லி முடித்து தொழுகை முடிந்துவிட்டது [2]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது முடிந்த பிறகு, இவ்வாறு அல்ஹம்துலில்லாஹ் சொன்னவர் யார் என்று கேட்கிறார்கள் [2]. அந்த நபித்தோழர் தயக்கத்தோடு மூன்றாவது தடவைதான் நான் என்று சொல்கிறார் [2]. அந்த நேரத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், நீ இவ்வாறு அல்லாஹ்வை புகழ்ந்த நேரத்தில், அதை, எடுத்துச் செல்வதற்காக வேண்டி, நிறைய மலக்குகள் போட்டி போட்டார்கள் என்று சொன்னார்கள் [2]. எனவே, இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து உலமாக்கள், ஒருவர் தொழுகையிலே இருக்கிற போது அவருக்கு தும்மல் வந்தால் சத்தம் வெளியே கேட்கக்கூடிய முறையில் அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது சுன்னா என்பதை நமக்கு வழிகாட்டுகிறார்கள் [2].
அதே நேரத்திலே பக்கத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறவர்கள் அதற்கு இர்ஹமுக்கல்லாஹ் சொல்லக்கூடாது [3]. அவ்வாறு சொல்வதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரங்களும் அனுமதியும் கிடையாது என்பதையும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள் [3]. எனவே ஒருவர் தொழுகையிலே தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் அவர் தாராளமாக சொல்லலாம் வல்லாஹுத்தஆலா ஆலம் [3].