அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத தொழுகையிலே எவ்வாறு நியத் வைக்க வேண்டும் என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [15]. அன்புள்ள சகோதர சகோதரிகளே நியத் என்பது எல்லா வணக்கங்களுக்குமே ஷர்த் நிபந்தனையாகும் என்று உலமாக்கள் ஏகோபித்த நிலையில் குறிப்பிட்டிருக்கிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் இன்னமல் அமாலுவினியாத் நிச்சயமாக செயல்கள் எல்லாம் எண்ணங்களை வைத்தே தீர்மானிக்கப்படும் என்று சொன்னார்கள் இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து நியத் என்பது எல்லா வணக்கங்களுக்கும் தொழுகைக்கு மட்டுமல்ல நாம் செய்யக்கூடிய அனைத்து வணக்கங்களுக்கும் நியத் ஒரு நிபந்தனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [15]. இந்த நியத்தை நாம் வைக்கிற போது மனதால் வைக்க வேண்டும் என்பதுதான் நமக்கு குர்ஆனும் ஹதீஸும் கற்றுத் தரக்கூடிய குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் இமாம்கள் கற்றுத் தரக்கூடிய வழிகாட்டலாகும் [15]. நியத்தை மனதால் வைக்க வேண்டும் [15]. அதனால்தான் உலமாக்கள் சொல்லுவார்கள் அநியா மஹல்லுஹா அல்கல்ப் நியத்திற்குரிய இடம் உள்ளமாகும் என்று சொல்வார்கள் [15].
எனவே உள்ளத்தில் தான் இதயத்தில் தான் நியத் வரவேண்டும் [16]. நியத்தை வாயால் மொழிவது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்த ஒரு நடைமுறை கிடையாது [16]. அதேபோல சஹாபாக்களிடத்திலும் இவ்வாறு நியத்தை வாயால் சொல்லுகிற ஒரு நிலை இருக்கவில்லை [16]. இமாம்களும் கூட அந்த நியத்தை வாயால் சொல்வதை நமக்கு காட்டி தரவில்லை [16]. எனவே ஒருவர் தொழுகைக்காக சென்று உசல்லி பர்தல் மகரிபி அல்லது இஷா என்று சொல்வதோ அல்லது ரமலான் மாதத்தில் நவைத்து சமதி அன்னதா என்று சொல்வதோ அல்லது மஸ்ஜிதிலே போய் உட்காருகிற போது நவைத்துல் என்று சொல்வதோ நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் காட்டி தந்த வழிமுறை அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [16]. ஒவ்வொரு தொழுகைக்கு முன்னாலும் நாம் அல்லாஹ்வுக்காக இந்த தொழுகை நிறைவேற்றுகிறேன் என்று மனதால் குறிப்பிட்ட தொழுகையை நியத்து வைத்துக் கொள்வதுதான் நியத்து வைக்கிற முறையாகும் வல்லாஹுத்தஆலா ஆலம் [16].