Dr. ஷேக் முபாரக் மதனி

தாய்க்கு விருப்பமில்லை என்பதற்காக காதலித்த பெண்ணை விட்டு விடலாமா?

திருமணம் அகீதா

← முந்தையஅடுதது →
கேள்வி
தாய்க்கு விருப்பமில்லை என்பதற்காக காதலித்த பெண்ணை விட்டு விடலாமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்துலாம் ரசூலில்லா பொதுவாக காதல் என்பது இன்று உலகத்தில் காணப்படக்கூடிய மிக மோசமான ஒரு நோயாகும் [1]. ஆண்களும் பெண்களும் பள்ளிக்கூடங்கள் பல்கலை கழகங்கள் கல்லூரிகளிலே ஒருவர் ஒருவரை காதலிப்பது என்பது இன்று சர்வசாதாரணமான விஷயமாக மாறியிருக்கிறது [1]. ஒரு ஆண் ஒரு பெண்ணை திருமணம் முடிப்பதற்காக வேண்டி விரும்பலாம் இதில் தப்பு கிடையாது [1]. அந்த விருப்பத்தை அவர் தெரியப்படுத்துவதாக இருந்தால் அந்த பிள்ளையின் பெற்றோரிடத்தில் போய் அல்லது பாதுகாவலர்களிடம் போய் தன்னுடைய விருப்பத்தை தெரியப்படுத்தி சரியான முறையில் அந்த திருமணத்தை நடத்துவதில் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை [1]. ஆனால் இன்றைக்கு காணப்படக்கூடிய காதல் என்ற இந்த நடைமுறை நிச்சயமாக ஜாஹிலியத்தானது இஸ்லாம் அனுமதிக்காதது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதல்ல [1]. இவ்வாறான காதல் நோய்க்கு உள்ளாகி இருக்கக்கூடிய இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் [1]. தவ்பா செய்ய வேண்டும் [1]. நீங்கள் ஒரு பெண்ணை நேசிக்கிறீர்கள் [1].

அந்த பெண்ணை நீங்கள் திருமணம் முடிப்பதற்கு உங்களுடைய பெற்றோர் விரும்பவில்லை என்றால், அனுமதிக்கவில்லை என்றால் அந்த பெண்ணை நீங்கள் திருமணம் முடிக்க கூடாது [2]. எந்த அளவுக்கு என்றால் நீங்கள் திருமணம் முடித்த பிறகு உங்களுடைய மனைவியை உங்களுடைய பெற்றோர் பிடிக்காமல் தலாக் சொல்லச் சொன்னால் தலாக் சொல்ல வேண்டும் என்கிற அளவுக்கு இஸ்லாமிய அறிஞர்கள் பெற்றோருக்கு கட்டுப்படுவதை வலியுறுத்தி இருக்கிறார்கள் [2]. எனவே நீங்கள் காதலித்த அல்லது விரும்பிய ஒரு பெண்ணை பெற்றோர் திருமணம் முடிக்க வேண்டாம் என்று சொல்லுகிற போது நீங்கள் அதை தவிர்ந்து கொள்கிறீர்கள் என்றால் நிச்சயமாக அது உங்கள் மீது குற்றமாகாது [2]. நான் வாக்களித்து விட்டேன் ஏமாற்றுகிறேன் என்றெல்லாம் கிடையாது நீங்கள் ஏற்கனவே செய்தது பாவமாகும் [2]. அதற்காக நீங்கள் தவ்பா செய்து கொள்ளுங்கள் பெற்றோர் சொல்லக்கூடிய சாலிஹான நல்ல பெண்களை நீங்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள் வல்லாஹுத்தஆலா ஆலம் [2].

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →