Dr. ஷேக் முபாரக் மதனி

தலாக் மற்றும் குல்உ பற்றிய முழுமையான விளக்கத்தை தர முடியுமா?

திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
தலாக் மற்றும் குல்உ பற்றிய முழுமையான விளக்கத்தை தர முடியுமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாத தலாக் பற்றிய ஒரு தெளிவு தேவை என்று கேட்கிறார்கள் [4]. தலாக்கை பொறுத்தவரையில் அன்புள்ள சகோதர சகோதரிகளே இது இஸ்லாத்திலே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது [4]. ஒரு கணவன் தன்னுடைய மனைவி தனக்கு கட்டுப்படாத வேளைகளில் அல்லது அவளை பிடிக்காத சந்தர்ப்பங்களில் அவளோடு வாழ விரும்பாமல் அந்த திருமண வாழ்க்கையை துண்டித்துக் கொள்வதற்காக இஸ்லாம் வழங்கி ய வழிதான் தலாக்காகும் [4]. ஒரு ஆணை பொறுத்தவரையில் அந்த ஆண் பெண்ணோடு வாழ விரும்பாவிட்டால் அவளை தலாக் சொல்லுகிற உரிமை அவனுக்கு இருக்கிறது [4]. இந்த தலாக்கை பொறுத்தவரையில் அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா அல்குர்ஆனிலே அதை அனுமதிக்கிறான் [4]. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அனுமதித்திருக்கிறார்கள் [4]. ஆனால் இந்த தலாக்கை ஒருவர் ஒரு சரியான முறையில் பயன்படுத்தாமல் அதை மிஸ்யூஸ் பண்ணுவது இஸ்லாம் அவருக்கு வழங்கி இருக்கக்கூடிய அந்த சலுகையை அவர் மிஸ்யூஸ் பண்ணி அதாவது துஷ்பிரயோகம் பண்ணி பெண்களுக்கு அநீதி இழைப்பாராக இருந்தால் நிச்சயமாக அதற்குரிய தண்டனை அவர் மறுமையில் அனுபவித்தே ஆக வேண்டும் [4]. குடும்ப வாழ்க்கை என்பது கணவனும் மனைவியும் பரஸ்பரம் ஒருவர் மற்றவரை புரிந்து இரண்டு பேரும் அன்புகளை பரிமாறி சந்தோஷமாக வாழ்வதற்குரிய ஒரு இடமாகும் [5]. அந்த சந்தோஷமும் புரிந்துணர்வும் இல்லாமல் போகிற போது நிச்சயமாக அவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக வாழ்வதில் அர்த்தம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [5].

அந்த நேரத்தில் கணவன் தன்னுடைய அந்த தலாக் என்கிற அந்த உரிமை பயன்படுத்தி அந்த பெண்ணை தனக்கு வேண்டாம் என்று சொல்வதற்கு மார்க்கத்திலே அனுமதி இருக்கிறது [5]. இப்படி தலாக் சொல்லும்போது அன்புள்ள சகோதர சகோதரிகளே அந்த பெண் ஹைலிருந்து சுத்தமானவளாக இருக்க வேண்டும் [5]. இது மிக முக்கியமான ஒரு அம்சமாகும் [5]. மாதவிடாயோடு மனைவி இருக்கிற நேரத்தில் ஹைலுடன் அவள் இருக்கிற நேரத்தில் அவளை தலாக் சொன்னால் அந்த தலாக்கை உலமாக்கள் அத்தலாக்குல் பித பிதத்தான தலாக் என்று அடையாளப்படுத்துகிறார்கள் [5]. இவ்வாறு தலாக் சொன்னால் அந்த தலாக் இடம்பெறுமா இல்லையா தலாக்காக அது கொல்லப்படுமா இல்லையா என்பதிலே கருத்து வேறுபாடு உலமாக்கள் மத்தியிலே இருக்கிறது [5]. இருந்தாலும் இதிலே வலுவான கருத்து தலாக் இடம்பெற மாட்டாது என்பதாகும் [5]. ஹைலுடைய நிலையில் மனைவி தலாக் சொல்லிவிட்டால் அது தலாக்காக கொள்ளப்பட மாட்டாது என்பதுதான் இந்த மஸ்லாவில் வலுவான கருத்து என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [5].

இப்ப தலாக் சொல்லப்பட்ட பெண் சுத்தமான நிலையில் அவள் தலாக் சொல்லப்படுகிறாள் என்றால் இந்த தலாக் சொல்லப்பட்ட பெண்ணை பொறுத்தவரையில் அவள் மூன்று ஹைலுகள் இத்தா இருக்க வேண்டும் [6]. சுத்தமான நிலையில் இவர் தலாக் சொல்லி இருப்பார் [6]. திரும்ப ஒரு ஹைல் வந்து திரும்ப சுத்தமாக வேண்டும் [6]. இது ஒன்று [6]. அடுத்த ஹைல் வந்து திரும்ப சுத்தமாக வேண்டும் [6]. இரண்டு திரும்ப ஹைல் வந்து சுத்தமாக வேண்டும் [6]. இது மூன்று [6]. இந்த மூன்று ஹைலுகள் அந்தப் பெண் இத்தா இருக்க வேண்டும் [6]. இப்படி இத்தா இருக்கிற நேரத்தில் கணவனுடைய வீட்டில் தான் அவள் இத்தா இருக்க வேண்டும் [6]. இந்த இத்தா முடிவதற்குள் இரண்டு பேரும் சேர்ந்து கொள்ள விரும்பினால் தாராளமாக அவர்கள் சேர்ந்து கொள்ளலாம் [6]. இதற்கு எந்த ஃபார்மலிட்ீஸும் கிடையாது [6]. இரண்டு பேரும் குடும்ப வாழ்க்கை இணைந்து கொண்டார்களாக இருந்தால் அந்த தலாக் என்கிற சப்ஜெக்ட் முடிந்துவிடும் [6]. இது மிக பிரதானமானதாகும் [6]. இந்த மூன்று ஹைலுகள் இத்தா இருந்து இத்தாவுடைய காலம் முடிந்துவிட்டால் அவர்கள் இரண்டு பேரும் கணவன் மனைவி என்கிற நிலையிலிருந்து விடுபட்டு போகிறார்கள் [6]. அதற்குப் பிறகு அவர்கள் இரண்டு பேரும் சேர விரும்பினால் புதிதாக அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் [7]. மகர் கொடுத்து ஈஜாப் கபூல் செய்து புதிதாக திருமணம் செய்து கொண்டால் இரண்டு பேரும் சேர முடியும் என்பதை நாம புரிந்து கொள்ள வேண்டும் [7]. இது மிக முக்கியமான ஒரு அம்சமாகும் [7].

அதே நேரத்தில் தலாக் மூன்று இத்தாக் தலாக் சொல்லப்பட்டு, மூன்று ஹைலுகள் இத்தா இருந்த பிறகு மீண்டும் அவர் இரண்டாவது தலாகை சொல்வாராக இருந்தால், இன்னும் ஒரு சான்ஸ் அவர்களுக்கு மூன்று ஹைலுடைய காலத்தில் இருக்கிறது [7]. அந்த நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் [7]. மூன்று ஹைலுகள் அந்த பெண் இத்தா இருக்க வேண்டும் [7]. அப்படி இத்தா இருக்கிற நேரத்தில், அவர் வந்து, இரண்டாவது தலாக்கை சொல்லி விடுவாராக இருந்தால், மீண்டும் அந்தப் பெண்மணி இத்தாவை தொடர வேண்டும் [7]. அப்படி தொடர்கிற போது, அவர்கள் சேர்ந்து கொள்ளலாம் [7]. அல்லது, இரண்டாவது இத்தாவும் முடிந்த பிறகு சேர வேண்டுமாக இருந்தால், அவர்கள் திருமணம் செய்து சேர வேண்டும் [7]. மூன்றாவது தலாக் சொல்லிவிட்டாராக இருந்தால், அவர்கள் இரண்டு பேரும், சேரவே முடியாது [7]. இரண்டு பேரும் திரும்ப சேர வேண்டுமாக இருந்தால், அந்த பெண்மணி வேறொரு ஆணை திருமணம் முடித்து, அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு, அதன் மூலம் தலாக் சொல்லப்பட்டு, மீண்டும் அந்த பெண்மணி மூன்று ஹைகள் இத்தா இருந்த பிறகுதான், முதலில் திருமணம் முடித்தவர் இந்தப் பெண்ணை மீண்டும் திருமணம் முடிக்கலாம் [7]. என்பதை இங்கே நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [8].

அடுத்ததாக, அன்புள்ள சகோதர, சகோதரிகளே, ஒரு ஆணுக்கு தலாக் சொல்லுகிற உரிமையை கொடுத்த இஸ்லாம் ஒரு பெண்ணுக்கும் தான் கணவனோடு வாழ விரும்பாவிட்டால் குலு செய்யக்கூடிய அதாவது கணவனிடமிருந்து பிரிந்து கொள்ளக்கூடிய ஒரு உரிமையை கொடுத்திருக்கிறது இதற்கு ஹுலு என்று அழைக்கப்படும் [8]. இந்த குலு செய்வது என்பதை பொறுத்தவரையில் ஒரு பெண்மணி நீதிபதியிடம் சென்று தனக்கு தன்னுடைய கணவனோடு வாழ விருப்பமில்லை என்று சொல்கிற போது அந்த நீதிபதி அவன் கொடுத்த கணவன் கொடுத்த மகரை திருப்பி கொடுக்கச் சொல்லுவான் அல்லது ஏதாவது கம்பன்சேஷன் போல ஒரு தொகை அல்லது ஒரு பொருளை கொடுக்கச் சொல்லுமாறு நீதிபதி சொல்லுவார் [8]. சொன்ன பிறகு அந்த பணத்தை அல்லது அந்த மகரை அல்லது அந்த தொகையை அந்த பெண்மணி கணவனுக்கு திருப்பி கொடுத்த பிறகு கணவன் அந்த பெண்ணை பார்த்து நீதிபதிக்கு முன்னால் உன்னை நான் பிரிந்து விடுகிறேன் உன்னை நான் குலு செய்து விடுகிறேன் என்று சொன்னால் ஹுலு என்பது இடம்பெற்றுவிடும் [8]. இது மனைவியுடைய ரிக்வஸ்டின் பெயரில் நடக்கக்கூடியதாகும் [9].

இவ்வாறு குலு இடம்பெற்றால் விவாகரத்தில் இடம்பெற்றால் அந்த பெண்மணி இத்தா இருக்க வேண்டுமா என்று கேட்டால் கண்டிப்பாக இத்தா இருக்க வேண்டும் [9]. குலு செய்யப்பட்ட பெண்மணி இத்தா இருக்க வேண்டும் [9]. எவ்வளவு காலம் இத்தா இருக்க வேண்டும் என்பதிலே கருத்து வேறுபாடு இருந்தாலும் சஹாபாக்கள் ில் பலரும் சலபு சாலிஹீன்களில் பலரும் முன்வைக்கக்கூடிய கருத்து அதேபோல சுன்னாவுக்கு உடன்பாடாக வரக்கூடிய கருத்துதான் சாபித்னு கைஸ் ரலியல்லாஹு அவர்களுடைய மனைவி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் போய் தன்னுடைய கணவனோடு வாழ விருப்பமில்லை என்று சொன்னபோது அவர் மகராக கொடுத்த தோட்டத்தை திருப்பி தருமாறு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த பெண்மணிக்கு கட்டளையிட்டார்கள் [9]. அந்த பெண்மணி அந்த தோட்டத்தை கணவனுக்கு திருப்பி கொடுத்தார்கள் [9]. அதற்கு பிறகு இரண்டு பேரும் பிரிந்து கொண்டார்கள் என்கிற ஹதீஸ் புகாரியிலே வருகிறது [9]. இதே செய்தி திருமதியிலே வரும்போது அதிலே நாம் பார்க்கக்கூடிய திருமதி நஸாயி போன்ற பல்வேறு ஹதீஸ் நூல்களிலே அந்த பெண்மணியிடம் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ ஒரு ஹைல் இத்தாரி என்று சொன்னார்கள் [9]. குலூ செய்யும் போதும் அந்த பெண்மணி சுத்தமான நிலையில் குலூ செய்யப்பட வேண்டும் பிறகு அந்த பெண்மணி ஒரு ஹைல் இத்தா இருக்க வேண்டும் ஒரு ஹைல் இத்தா ந்த பிறகு அவர்களுக்குிடையில் கணவன் மனைவி என்ற உறவு முறிந்து விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [10]. இதுதான் சுருக்கமாக தலாக்ஹுலு பற்றிய சட்டமாகும் [10]. மேலதிகமான தகவல்கள் தேவையானவர்கள் உங்களுடைய ஊர்களிலே உள்ள உங்களுக்கு தெரிந்த உலமாக்களோடு தொடர்பு கொண்டு இது பற்றி அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹுத்தஆலா ஆலம் [10].

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →