Dr. ஷேக் முபாரக் மதனி

சூரா வாக்கியா ஓதினால் வறுமை நீங்குமா?

ஹதீஸ் அகீதா குர்ஆன்

← முந்தையஅடுதது →
கேள்வி
சூரா வாக்கியா ஓதினால் வறுமை நீங்குமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்துஸலாம் ரசூலில் இமாம் பைஹக்கி ரஹிமுல்லாஹ் அவர்கள் ஒரு செய்தியை பதிவு செய்கிறார்கள். மன் கரசூரத்தல் வாக்கியா குல்லலைலத்தின் லம்சின் அபதா யார் ஒருவர் ஒவ்வொரு இரவும் சூரத்துல் வாக்கியாவை ஓதி வருகிறாரோ அவருக்கு எப்போதுமே வறுமை ஏற்படாது என்று இந்த செய்தியை ஆதாரமாக வைத்து சில நூல்களிலே வறுமை நீங்குவதற்கு சூரத்துல் வாக்கியா ஓதுங்கள் என்று ஆர்வமூட்டப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் [1]. அதேபோல இந்த செய்தியை ஆதாரமாக வைத்து சில சகோதர அவர்களும் மக்களை சூரத்துல் வாக்கியா ஓதுமாறு ஆர்வமூட்டி வருவதையும் பார்க்கிறோம் [1]. வறுமைக்கு அஞ்சக்கூடிய மக்கள் வறுமையிலே கஷ்டப்படக்கூடிய மக்கள் இதை ஒரு நல்ல செய்தியாக எடுத்து நடைமுறைப்படுத்தி வருவதையும் பார்க்கிறோம் [1]. இருந்தாலும் கூட இமாம் பைஹக்கி ரஹ்முல்லாஹ் அவர்கள் இந்த செய்தியை பதிவு செய்திருந்தாலும் அவர்களே இந்த செய்தி பலவீனமானது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் [1]. அது மட்டும் ல்ல இமாம் அஹமத் இமாம் அபூ ஹாத்திம் அதேபோன்று இன்னும் பல இமாம்கள் இந்த செய்தி மிகவும் பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள் எனவே இந்த செய்தியை ஆதாரமாக எடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [1]. இவ்வாறான ஒரு பலவீனமான செய்தியின் மூலம் வந்திருக்கக்கூடிய இந்த அமலை நாம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டும் [1]. எனவே வறுமை நீங்கும் என்ற எண்ணத்தோடு சூரத்துல் வாக்கியா ஓதுவது தவறாகும் வல்லாஹுத்தஆலால [1].

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →